அதில், “உங்கள் அனைவருக்கும் நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்; இறுதி வெற்றிவரை ஈரான் மக்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எவினில் அடைக்கப்பட்டுள்ள 46 பெண் கைதிகள் சார்பாக நோபல் கமிட்டிக்கு வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவிக்கிறேன்.
இந்த இயக்கத்தின் பலம் ஈரானிய பெண்களின் அமைப்பில் உள்ளது. நாங்கள் விரும்பாததைவிட எங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நாங்கள் உறுதியாக அறிவோம். வெற்றி எளிதானது அல்ல, ஆனால் அது நிச்சயம் கிடைக்கும்.
நாங்கள் அதை நம்புகிறோம், வெற்றியில் உறுதியாக இருக்கிறோம்’’ என்று கடிதத்தில் கூறியுள்ளார்.
ஈரானில் நடந்த போராட்ட இயக்கத்தை மேற்கத்திய நாடுகளின் தலைமையிலான நாசவேலை என்று தெஹ்ரான் கூறி வருகிறது. முகமதிக்கு அமைதி பரிசு வழங்க முடிவெடுத்ததை அடுத்து மனித உரிமைகள் பிரச்னையில் நோபல் குழு தலையிட்டு அரசியல் செய்வதாகக் குற்றம் சாட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.