இதனை தற்போது பிஎஸ்ஜி கிளப்பின் பயிற்சியாளர் கிறிஸ்டோப் கால்டியர் உறுதி செய்திருக்கிறார். பிரான்ஸில் நாளை (சனிக்கிழமை) நடைபெறும் Ligue 1 ஆட்டத்தில் கிளர்மான்ட் அணியுடன் பிஎஸ்ஜி அணி நாளை மோதவிருக்கிறது. இதுவே மெஸ்ஸி, பிஎஸ்ஜி அணிக்காக விளையாடும் கடைசி ஆட்டமாகும்.
2021 முதல் 2023 ஜூன் வரை மெஸ்ஸியை பிஎஸ்ஜி அணி ஒப்பந்தம் செய்திருந்தது. தற்போது ஒப்பந்தம் முடிவது மட்டுமின்றி சமீபத்தில் சவூதி அரேபியாவுக்கு அணியின் அனுமதியின்றி மெஸ்ஸி சென்றதால் அணி அவரை இடைநீக்கம் செய்திருந்தது. இதுபோன்ற கருத்து வேறுபாடுகளினாலும் மெஸ்ஸி அணியில் இருந்து விலகுகிறார் என்று கூறப்படுகிறது.