Last Updated : 26 May, 2022 07:08 AM
Published : 26 May 2022 07:08 AM
Last Updated : 26 May 2022 07:08 AM

கொல்கத்தா: ஐபிஎல் டி20 தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற தகுதி சுற்று 1 ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டியில் கால் பதித்தது குஜராத் டைட்டன்ஸ்.
போட்டி முடிவடைந்ததும் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறும்போது, “நிறைய பேர் டேவிட் மில்லரின் திறன் முடிந்தது என்றே கருதினார்கள். ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் அவரை ஏலத்தில் எடுத்ததில் இருந்தே அவர், வெற்றி தேடிக்கொடுப்பவர்தான்.
ராஜஸ்தானுக்கு எதிராக டேவிட் மில்லர் அற்புதமாக விளையாடினார். இதுபோன்று அவர், எப்போதும் விளையாடுவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் அவருக்கு முக்கியத்துவம், அன்பு மற்றும் தெளிவு கொடுப்பது முக்கியம். அவர் சிறப்பாக செயல்படத் தவறினால் அது ஒரு விளையாட்டு மட்டுமே” என்றார்.