'சீனியர்கள் எனக்கு செய்ததை இளம் வீரர்களுக்கு நான் செய்யப்போகிறேன்!' – ரோஹித் மகிழ்ச்சி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த மூன்றாவது ஓடிஐ போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. அணியின் சூப்பர் சீனியர் வீரரான ரோஹித் சதமடித்து அசத்தியிருந்தார். அவருக்கே ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டிருந்தது.Rohit Sharmaவிருதை வாங்கிவிட்டு ரோஹித் பேசுகையில், ‘ஆஸ்திரேலியாவில் போட்டிகள் எப்போதும் இவ்வளவு கடினமாகத்தான் இருக்கும். அந்த அணி தரமான பந்துவீச்சாளர்களை கொண்ட அணி. களத்தையும் சூழலையும் சரியாக உள்வாங்கிக் கொண்டு ஆடினால் மட்டுமே உங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்ட முடியும்.…









