"கரூர் சம்பவத்திற்கு செந்தில் பாலாஜிதான் காரணம் என்பது நாட்டிற்கே தெரியும்" – நயினார் நாகேந்திரன்
பாரதிய ஜனதா கட்சியில் உள்ள அணிகளுக்குப் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, அவர்களின் அறிமுகக் கூட்டம் இன்று திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு அணிகளின் புதிய மாநிலத் தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு அணியின் முக்கியத்துவம், செயல்பாடு, எதிர்காலத்தில் அணி நிர்வாகிகள் செய்யவேண்டிய பணிகள், தேர்தல் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில்…









