சந்தாரா: 3 வயது குழந்தை சாகும் வரை உண்ணாவிரதம் – மதச்சடங்கா? கருணையற்ற நிகழ்வா?
பட மூலாதாரம், SamirKhanபடக்குறிப்பு, வியானா ஜெயின் மூளை கட்டியால் பாதிக்கப்பட்டிருந்தார் (கோப்புப்படம்) கட்டுரை தகவல்மத்திய பிரதேச மாநிலம் இந்தோரில் மூளை கட்டியால்(Brain Tumor) பாதிக்கப்பட்ட மூன்றரை வயது குழந்தையை ‘சந்தாரா’ என அழைக்கப்படும் விரதத்தைக் கடைபிடிக்க வைத்த சம்பவம் தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, அக்குழந்தை இறந்துவிட்டது.இதனிடையே, மிக இளம் வயதிலேயே சந்தாரா விரதத்தைக் கடைபிடிக்க உறுதிபூண்டதற்காக, அச்சிறுமி ‘கோல்டன் புக் ஆஃப் வார்ல்ட் ரெக்கார்ட்ஸில்’ இடம்பிடித்துள்ளார். இதன் மூலம் இந்த விரத நடைமுறை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.…







