கல்விக்கும், மருத்துவத்துக்கும் தமிழ்நாடு அரசு முக்கியத்துவம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
கரூர்: கல்விக்கும், மருத்துவத்துக்கும் அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது என்று கரூரில் நடந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூரில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 19 பயனாளிகளுக்கு ரூ.267 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கலெக்டர் பிரபு சங்கர் தலைமை வகித்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: இந்த ஆட்சியில் கல்விக்கும், மருத்துவத்துக்கும்…









