`உயிரைப் பறித்த கள்ளச்சாராயம்!' – 3 பேர் பலி… சிகிச்சையில் பலர்! – விழுப்புரத்தில் அதிர்ச்சி
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே இருக்கிறது எக்கியார் குப்பம். மீனவ கிராமமான இந்தப் பகுதியை ஒட்டிய ‘வம்பாமேடு’ எனும் இடத்தில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வந்திருக்கிறது. இங்கு, பலரும் கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்திருக்கின்றனர். அதில், எக்கியார் குப்பத்தைச் சேர்ந்த சந்திரன், சங்கர், தரணிவேல், மண்ணாங்கட்டி, சுரேஷ், மற்றொரு மண்ணாங்கட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் திடீரென சுருண்டு விழுந்து வயிற்று வலியால் துடித்திருக்கின்றனர். சிலர் ரத்த வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது.கள்ளச்சாராயம்! `உண்மையான மதிப்பெண்தான் என்ன?’- தமிழில் 138; 514…









