ஒடிசா ரயில் விபத்து: கருணாநிதி 100-வது பிறந்தநாள் நிகழ்ச்சிகள் – பொதுக்கூட்டங்கள் அனைத்தும் ரத்து! | DMK government cancelled all kanunanidhi 100 birthday events after train accident
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு – ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒடிசாவில் பயங்கர விபத்திற்குள்ளாகி 230-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளது நாட்டையும் – நாட்டு மக்களையும் உலுக்கி அனைவரையும் பேரதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. மனித உயிர்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்துள்ள இந்த படுமோசமான விபத்தில் 900-த்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, மீட்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில்…






