சிறார் திருமணம் எதிரொலி: கர்ப்பத்தை கண்காணிக்க அஸ்ஸாம் மாணவிகளுக்கு மாதவிடாய் கார்டு – Menstrual card for Assamese girls to monitor pregnancy
அஸ்ஸாம் மாநிலத்தில் பெண்களுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்துவைக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடக்கின்றன. சமீபத்தில் சிறார் திருமணத்திற்கு எதிராக மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. அதில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களும் நடத்தப்பட்டன. அஸ்ஸாமில் பிரசவத்தின் போது அதிக அளவில் இறப்பு விகிதம் இருக்கிறது என்று அரசு தரவுகளைச் சொல்லி நடவடிக்கை எடுத்தது. இதனை தொடர்ந்து, அஸ்ஸாம் மாநிலத்தில் மாணவிகளுக்கு மாதவிடாய் கார்டு வழங்கப்பட்டுள்ளது.…









