Daily Archives: March 12, 2023

Doctor Vikatan: ஹார்ட் அட்டாக் ஆபத்திலிருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி? | Doctor vikatan – How can women protect themselves from the risk of heart attack?

ஸ்ட்ரெஸ்ஸை கட்டுப்படுத்த போதுமான அளவு ஓய்வு அவசியம். பிடித்த ஏதேனும் ஒரு விஷயத்தைச் செய்யலாம். நண்பர்கள், உறவினர்களுடன் நல்ல ரிலேஷன்ஷிப்பில் இருங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். ஆனால் அதை அளவுக்கதிகமாகச் செய்யாதீர்கள். வாரத்துக்கு 150 நிமிடங்கள் என மிதமான பயிற்சிகளைச் செய்யுங்கள். அது நடைப்பயிற்சியோ, நடனமோ எதுவாகவும் இருக்கலாம்.மாரடைப்புநெஞ்சில் வலி, அது கைகளில் பரவுவது என ஹார்ட் அட்டாக்கின் பொதுவான அறிகுறிகள் மட்டுமே பலருக்கும் தெரியும். பெண்களைப் பொறுத்தவரை அதீத களைப்பாக உணர்வது, மூச்சு வாங்குவது, வாந்தி வருஷவது…

4-ஆவது வெற்றியைப் பெறுமா மும்பை அணி? – உ.பி. வாரியர்ஸை வீழ்த்த 160 ரன்கள் இலக்கு

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் 10ஆவது லீக் ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ் அணியை வீழ்த்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 160 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் அலிசா ஹீலி மற்றும் தேவிகா வைத்யா ஆகியோர் களத்தில் இறங்கினர். தேவிகா 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த கிரன் நேவ்கிர் 17 ரன்னில் ஆட்டமிழக்க,…

“ஆர்கசம் அனுபவித்ததே இல்லை'' – காமத்துக்கு மரியாதை | S3 E 32

எனக்கு 28 வயதாகிறது. சில மாதங்களுக்கு முன்புதான் எனக்குத் திருமணமானது. பெண்களுக்கும் ஆர்கசம் கிடைக்கும் என்று என் தோழிகள் சொன்னார்கள். ஆனால், இதுவரை நான் அதை உணர்ந்ததே இல்லை. நான் என்ன செய்வது? – வாசகி ஒருவரின் கேள்வி இது. இதற்குப் பதிலளிக்கிறார் மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி. “இவர்கள் எந்த முறையில் செக்ஸில் ஈடுபடுகிறார்கள் என்பது தெரியவில்லை. பெண்களுக்கு ஆர்கசம் வரவேண்டுமென்றால், அவர்களுக்கு செக்ஸில் நாட்டம் இருக்க வேண்டும். அதனால் தனக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என்கிற பாசிட்டிவ் எண்ணம் இருக்க வேண்டும். உடல் சோர்வு இல்லாமல் இருக்க வேண்டும். Dr. Narayana Reddyபெண்களின் உள்ளாடைகளைத்…

ஆளும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு; கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும்?: கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் ஆளும் பாஜகவுக்கு பின்னடைவும், காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. கர்நாடகாவில் அடுத்த சில மாதங்களில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாஜக – காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையே மோதல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ‘லோக் போல்’ என்ற அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில், வரும் சட்டசபை ேதர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது. அந்த கருத்துக் கணிப்பின்படி,…

தூத்துக்குடி: அரசு மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரச் சீர்கேடு! – கவனிப்பார்களா அதிகாரிகள்? | people complain about thoothukudi government hospital for its unhygienic condition

தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்லும் இடமாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருக்கிறது. மருத்துவமனை வளாகத்தில் பல இடங்களில் கழிவுநீர்க் கால்வாய் மூடிகளும், கழிவுநீர்த்தொட்டி மூடிகளும் பெயர்ந்து காணப்படுகின்றன. தகரத்தினால் செய்யப்பட்ட இந்த மூடிகள் பல ஆண்டுகளாகக் கவனிப்பு இல்லாமல் இருக்கின்றன. இதனால் தற்போது துருப்பிடித்த நிலையில், பெயர்ந்து காணப்படுகின்றன.கழிவுநீர் வெளியேறும் இடங்களும், கழிவுநீர்த்தொட்டிகள் இருக்கும் இடங்களும் ஆபத்தான வகையில் திறந்து காணப்படுகின்றன. இதன் காரணமாக அங்கு சுகாதாரச் சீர்கேடு நிலவுவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.அரசு…

WPL : சம்பவம் செய்த டெல்லி; 6 ஓவர்களில் 87 ரன்கள்; பவர் ப்ளேன்னா இப்படி இருக்கணும்! | Delhi Capitals beats Gujarat Giants in WPL league Match

டெல்லி அணி பந்துவீச்சின் போது பவர்ப்ளேயில் 5 விக்கெட்டுகளையும், பேட்டிங்கின்போது 87 ரன்களையும் அடித்திருந்தது. நன்றி

விராட் கோலி சதம்: டெஸ்ட் கிரிக்கெட்டில் 40 மாதங்களுக்குப் பிறகு சதம் – சச்சின், லாராவை முந்தினார்

பட மூலாதாரம், Getty Images54 நிமிடங்களுக்கு முன்னர்கிரிக்கெட்டில் சாதனை நாயகனாகத் திகழும் நட்சத்திர வீரர் விராட் கோலி 1,205 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் சதம் கண்டுள்ளார். இதன் மூலம் டெஸ்ட் சதத்திற்கான தாகத்தைத் தணித்துக் கொண்டுள்ள அவர் சாதனைப் படிக்கட்டில் மேலும் ஒரு படி ஏறியிருக்கிறார். ஆமதாபாத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்த மைல்கல்லை விராட் கோலி எட்டியுள்ளார். முதல் இன்னிங்ஸில் 480 ரன் குவித்த…

சீமான் மீது மேலும் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு

ஈரோடு: வடமாநில தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மேலும் 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து, ஈரோடு திருநகர் காலனியில் கடந்த பிப்ரவரி 13ம் தேதி பிரசார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது, அவர் வடமாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையிலும், மிரட்டல்…

முகப்பரு: காரணம், மறைய எளிய தீர்வுகள், வராமல் தடுக்க வழிகள்!

டீன் ஏஜ் பருவத்தினரின் முக்கியக் கவலைகளுள் ஒன்று முகப்பரு. என்னதான் பலவகை க்ரீம்களையும் சோப்புகளையும் பயன்படுத்தினாலும், முகப்பரு பிரச்னைக்குத் தீர்வு கிடைத்தபாடில்லை என்று பலரும் கவலைப்படுவதை பார்த்திருக்கிறோம். இதனால் ஏற்படும் மனஉளைச்சலும் தாழ்வுமனப்பான்மையும் கடுமையானவை. வெளியில் செல்லும்போதும், பொது நிகழ்ச்சிகள், விசேஷங்கள், திருமண நிகழ்வுகளில் பங்கேற்கும்போதும், போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கும்போதும் முகப்பரு தரும் சங்கடத்தை சிலர் பெரிய பிரச்னையாக உணர்வார்கள். சில பருக்கள் வலி, அரிப்பை ஏற்படுத்துவதோடு, மறைந்தாலும் தழும்பை உருவாக்கி, முகத்தின் அழகைக் கெடுக்கின்றன. முகப்பருவில்…

1 2 3