IPL 2023: "தோனியின் ஃபினிஷிங் போலவே அவரின் இறுதி தொடர் இருக்கும்!"- மேத்யூ ஹைடன் நம்பிக்கை
இந்த வருட ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 31-ம் தேதி தொடங்கவிருக்கிறது. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நீண்ட நாள்களுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்க உள்ளது. இதனிடையே தோனி தனது கடைசிப் போட்டியை சென்னை சேப்பாக்கத்தில் விளையாடுவேன் என்று ஏற்கெனவே கூறியிருந்தார். இந்நிலையில் அவர் விளையாடும் கடைசி ஐபிஎல் போட்டி இந்தத் தொடராகக் கூட இருக்கலாம் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸின் முன்னாள் ஓப்பனருமான மேத்யூ ஹைடன் தெரிவித்திருக்கிறார். …


