ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான இளைஞர்.. லட்சக்கணக்கில் பறிபோன பணம்.. விரக்தியில் எடுத்த விபரீத முடிவு..!
சேலம் மாவட்டம் முள்ளாகாடு பகுதியை சேர்ந்த 26 வயதான குணசீலன். இவரது தாய் சிறு வயதிலேயே காலமான நிலையில், தந்தை மற்றொரு திருமணம் செய்து கொண்டார். குணசீலன் தனது தம்பிகளான பசுபதி, கமல் ஆகியோருடன் பாட்டி வீட்டில் வசித்து வந்தார். கல்லூரி படிப்பை பாதியில் விட்ட இவர், குடும்ப சூழல் காரணமாக திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் கூலிவேலைக்கு சென்று வந்தார். இவரது இளைய சகோதரர் பசுபதி மதுரையில் தனியார் ஹோட்டலில் சமையலராக வேலை செய்து…








