சென்னை: சமத்துவம், சகோதரத்துவம், இரக்கம், நீதி போன்ற குணங்கள் அனைவரிடமும் இருக்க வேண்டும் என மதுரை பெந்தகோஸ்தே திருச்சபைகளின் 4வது தேசிய மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளியில் பேசினார். அரசியலமைப்பு சட்டம்தான் நமது குடியரசை தொடர்ந்து வழிநடத்துகிறது. திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கிறிஸ்தவ மக்களுக்கு ஏராளமான திட்டங்களை செய்து வருகிறது. தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றும் பணியை செய்து வருகிறோம் எனவும் கூறினார்.
சமத்துவம், சகோதரத்துவம், இரக்கம், நீதி போன்ற குணங்கள் அனைவரிடமும் இருக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
Share