ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டி?.. இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை நாடும் எடப்பாடி தரப்பு..!
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணியில் யார் பெரியவர்கள் என்பதில் எதிர்க்கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள போட்டியால் தனித்தனியாக போட்டியிடக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அதிமுக எடப்பாடி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி, பாஜக ஆகியவை தனித்துப் போட்டியிடுவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், தமாகா தலைவர் வாசனுடன், எடப்பாடி அணியினர் இன்று ஆலோசனை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக…









