மழையினால் குறுவை நெல் பயிர்கள் சேதம் ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும்: எடப்பாடி கோரிக்கை
சென்னை: மழையினால் குறுவை நெல் பயிர்கள் மூழ்கி சேதமடைந்துள்ளதால், ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் குறுவை நெல் சாகுபடி செய்த சுமார் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மூழ்கி சேதமடைந்துள்ளன.…









