தேவரின் தங்கக்கவசம் எடுக்க ஓபிஎஸ் கையெழுத்திட அனுமதிக்க வேண்டும்: வங்கி அதிகாரிகளிடம் ஓபிஎஸ் அணியினர் மனு
மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தங்கக் கவசத்தை எடுக்க ஓபிஎஸ் கையெழுத்து போட அனுமதிக்கவேண்டும் என ஓபிஎஸ் அணியினர் வங்கி அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். அதிமுகவில் ஒற்றைத்தலைமை பிரச்சனையால், கடந்த ஜூலை 11ல் பொதுக்குழு நடந்தது. இதில், பொருளாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து, ஓபிஎஸ் நீக்கப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார். எனவே, கட்சி வரவு – செலவுகளை இவரே கவனிப்பாரென எடப்பாடி பழனிசாமி வங்கிகளுக்கு கடிதம் எழுதினார்.பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை…







