அதிமுக தலைமை அலுவலகம் சேதம் முதல் கட்ட விசாரணை அறிக்கையை ஐகோர்ட்டில் சிபிசிஐடி இன்று தாக்கல்
சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, முதல்கட்ட விசாரணை அறிக்கையை இன்று உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்கின்றனர். அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கையை வலிறுத்தி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இதற்கிடையே கடந்த ஜூலை 11ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வந்தார். அப்போது அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் பூட்டை உடைத்து ஜெயலலிதா அறையில் இருந்த முக்கிய ஆவணங்கள்…







