கொள்ளை: இறந்துகிடந்த கொசுக்கள்; டிஎன்ஏ மூலம் சிக்கிய திருடன்! – இது சீன போலீஸின் அடடே புலனாய்வு! | Police In China Catch Burglar Using DNA From Blood In Dead Mosquito
சீனாவில், இறந்த கொசுக்கள் மூலம், 19 நாள்களுக்குப் பிறகு குற்றவாளியை போலீஸ் கைதுசெய்திருக்கும் சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.அதாவது, திருட்டு நடந்த வீட்டில், இறந்துகிடந்த கொசுக்களின் ரத்த கறைகளை சோதனைக்கு உட்படுத்தி டி.என்.ஏ மூலம் போலீஸார் திருடனைக் கண்டுபிடித்திருக்கின்றனர். கடந்த ஜூன் 11-ம் தேதி, சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தில் உள்ள ஃபுஜோவில் இந்த திருட்டுச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.திருடன் பல மதிப்புமிக்க பொருள்களை அந்த வீட்டிலிருந்து திருடியிருக்கிறான். சமையலறையில் சில நூடுல்ஸ் மற்றும் முட்டை ஓடுகள் இருப்பதைக்…









