மடியில் கனம் இருப்பதால் எதிர்க்கட்சியாக செயல்பட அதிமுக தவறிவிட்டது: டிடிவி தினகரன் பேட்டி
திருவண்ணாமலை: அதிமுக மடியில் கனம் இருப்பதால், எதிர்க்கட்சியாக செயல்பட தவறிவிட்டனர் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நேற்று திருவண்ணாமலை வந்திருந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பேட்டி: அதிமுக மடியில் கனம் இருக்கிறது. அதனால் அவர்களுக்கு பயமிருக்கிறது. எனவே, எதிர்க்கட்சியாக செயல்படாமல் அமைதியாக இருக்கிறார்கள். எதிர்க்கட்சியாக செயல்பட தவறிவிட்டனர். ஆட்சியில் இருந்தபோதே அவர்கள் வலிமையாக செயல்படவில்லை. பிரதான எதிர்க்கட்சி இடத்தை பிடிக்க பாஜ முயற்சிக்கிறது. ஒரு…









