சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா நடத்தப்பட்ட விதம் சர்வதேச கிரிக்கெட் எதிர்காலத்திற்கான எச்சரிக்கை மணியா?

Share

இந்தியா, சாம்பியன்ஸ் டிராபி, சர்வதேச கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், மேத்யூ ஹென்றி
  • பதவி, பிபிசி விளையாட்டுப் பிரிவு செய்தியாளர்

சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கிய இடத்திலிருந்து 1,000 கி.மீ தள்ளியும், முடிந்திருக்க வேண்டிய இடத்திலிருந்து 2,000 கி.மீ அப்பாலும் நிறைவடைந்துள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

கடந்த ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பையை வென்ற பின்னர் இந்தியா பெற்றுள்ள இந்த வெற்றி உலகின் முன்னணி ‘வெள்ளை பந்து’ அணியாக அதன் இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது. 16 மாதங்களுக்கு முன்பு ஆமதாபாத்தில் 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றதால் இந்திய அணி அனுபவித்த வேதனையைக் குறைத்துள்ளது.

துபை நகரில் ஆயிரக்கணக்கான இந்திய ரசிகர்கள் இதனை கொண்டாடினாலும், இந்த தொடரில் நடந்த சில தவிர்க்க இயலாத விஷயங்கள் சர்வதேச கிரிக்கெட் வழிநடத்தும் பொறுப்பில் உள்ளவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com