கொரோனா தடுப்பூசி இல்லாமல் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும்?

Share

கொரோனா தடுப்பூசிகள்

பட மூலாதாரம், Getty Images

லண்டனின் அறிவியல் அருங்காட்சியகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புதிய கண்காட்சியில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளின் வளர்ச்சி மற்றும் விநியோகம் குறித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஓர் அலமாரியில் ஓர் ஊசி, ஒரு மருந்து பாட்டில் மற்றும் அட்டையிலான ஒரு தட்டு ஆகியவை உள்ளன. இவை, 2020ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி 90 வயதான மார்கரெட் கீனன் என்ற பெண்ணுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசியுடன் தொடர்புடையவை. மருத்துவ ஆய்வுகளுக்கு வெளியே கொரோனா தடுப்பூசியைப் பெற்ற உலகின் முதல் நபர் என்ற பெருமையைப் அந்தப் பெண்மணி அன்று பெற்றார்.

அந்தக் கணம் முதல் தற்போதுவரை உலகளவில் 13 பில்லியன் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் பூஸ்டர்கள் டோஸ்களும் அடங்கும். இந்த இரண்டு வருடங்களில் நாம் என்ன கற்றுக்கொண்டோம்? தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்த தரவு என்ன வெளிப்படுத்துகிறது? பக்க விளைவுகள் பற்றி என்ன தெரியும்?

சுருக்கமாக கூறுவதென்றால், உலகெங்கிலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்புகளைக் கட்டுப்படுத்துவதில் கொரோனாவுக்கு எதிரான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் முதன்மை பங்கு வகித்ததாக ஓர் ஆராய்ச்சி கூறுகிறது. தடுப்பூசி இல்லாவிட்டால், கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்திருக்கும்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com