அறந்தாங்கி: தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரசாரம்

Share

மக்கள் முதலில் திருந்த வேண்டும்

மக்கள் முதலில் திருந்த வேண்டும். மக்கள் திருந்தினால் தான் இந்த நாடு மாறும். யாராக இருந்தாலும் நூறு, பீரு, சோறு என்று கொடுத்தால் அவர்கள் பின்னால் செல்கிறீர்கள் ஏன்?.

நமது சொந்த காலில் நிற்பதற்கு நமக்கு தெரியாதா?. அவர்கள் கொடுக்கும் ரூ. 100, 500, 1000 -ஐ வைத்து எத்தனை நாளைக்கு குடும்பம் நடத்த முடியும்?.

ஐந்து வருடத்தை நீங்கள் இழக்கின்றீர்கள். ஐந்தாண்டு காலம் அந்த 500 ரூபாய்க்கு நீங்கள் அடிமையாக இருக்கிறீர்கள். யோசிக்க வேண்டும்.

தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் அறந்தாங்கியில் தேர்தல் பிரசாரம்

தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் அறந்தாங்கியில் தேர்தல் பிரசாரம்
d.dixith

மக்கள் என்றால் இன்றைக்கு சும்மா இல்லை. எத்தனையோ ஜீவன்கள் பூமியில் இருந்தாலும் ஆறறிவு கொண்ட ஜீவன்கள் மனிதன்தான்.

அப்படி, ஆறறிவு கொண்டு நாம் யோசிக்க வேண்டும். மக்களுக்கு யார் நல்லது செய்வார்கள் என்று சிந்தித்து வரும் 2026-ல் வாய்ப்புத் தர வேண்டும்.

ஏரிப் புறம்போக்கில் வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். வசதி இல்லாதவர்கள் வேறு என்ன செய்ய முடியும்?. அவர்களை அப்புறப்படுத்தினீர்கள் ஏன்?

அவர்களுக்கு ஒரு நல்ல அப்பார்ட்மென்ட் கட்டிக் கொடுத்துவிட்டு ஏன் அவர்களை அப்புறப்படுத்தக் கூடாது?. நீர்நிலைப் புறம்போக்கு என்று தெரிந்து அவர்களுக்கு மின்சார இணைப்பு வழங்கியது யார்?. இதையெல்லாம் யார் செய்தது?. இருக்கின்ற மின்சாரத்தையும் அனைத்து விட்டார்களாம்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com