Doctor Vikatan: என் இரண்டு குழந்தைகளுக்கும் முறையே 5 மற்றும் 7 வயதாகிறது. அவர்களுக்கு நாங்கள் அடிக்கடி நெல்லிக்காய் ஜூஸும், நெல்லிக்காய் சாதமும் கொடுப்பதுண்டு. நெல்லிக்காய் ஜூஸில் ஐஸ் சேர்க்காமல்தான் கொடுக்கிறோம். அவற்றைக் கொடுக்கும்போதெல்லாம் குழந்தைகளுக்கு ஜலதோஷம் பிடித்துக்கொள்கிறது. அதுவே ஆரஞ்சு, எலுமிச்சைப் பழங்கள் கொடுக்கும்போது இந்தப் பிரச்னை இல்லை. இதற்கு என்ன செய்ய வேண்டும்?
பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்
நீங்கள் நெல்லிக்காய் கொடுப்பதற்கான காரணம், பெரும்பாலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காகவே இருக்கும் என்பதாக நான் புரிந்துகொள்கிறேன்.