அகில்யாபாய் ஹோல்கர்: உடன்கட்டை மரணத்திற்கு தயாரான மால்வாவின் ராணி – முடிவை மாற்றி போர்க்களங்களை வென்றது எப்படி?
பட மூலாதாரம், PRABHAT PRAKASHANபடக்குறிப்பு, அகில்யாபாய் ஹோல்கர் ஔரங்கபாத்தில் பிறந்தார் கட்டுரை தகவல்மால்வாவின் ராணி அகில்யாபாய், அரசியாக மட்டுமல்ல, தனது பொதுநலப் பணிகளுக்காகவும், நிர்வாகத் திறனுக்காகவும் இன்றும் மிகுந்த மரியாதையுடன் நினைவுகூரப்படுகிறார்.வாரணாசி காசி விஸ்வநாதர் கோவில், குஜராத்தில் உள்ள சோமநாதர் கோவில் என ஆலயங்களை புதுப்பித்தது அவரின் புகழை இந்தியாவில் பரப்பியது. ஆனால், இவற்றைத் தவிர, அவரது சிறப்பான பொதுநல சேவை மற்றும் நிர்வாகத்தில் அவரது பங்களிப்புகளின் பட்டியல் மிகவும் நீளமானது.19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவுக்கு விஜயம்…









