`அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி’- எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் மருமகன் உள்ளிட்டோர் மீது புகார்
சென்னை வெட்டுவாங்கேணி, மகாலட்சுமி தெருவைச் சேர்ந்தவர் மகாராஜா (38). இவர் கடந்த 2-ம் தேதி சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, “நான் மேற்கண்ட முகவரியில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். அதே பகுதியில் இறைச்சி கடையை கடந்த 14 ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். கடந்த 2022 அக்டோபரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய பாபு என்பவர் எனக்கு அறிமுகமானார். அப்போது அவர் தன்னை முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மாப்பிள்ளை என்றும்…








