மகளிர் ஐபிஎல்; 5 அணிகள்… 409 வீராங்கனைகள்… இன்று பிரமாண்ட ஏலம்..!
மகளிருக்கான முதலாவது பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வீராங்கனைகளை தேர்வுசெய்வதற்கான ஏலம், மும்பையில் இன்று நடைபெறுகிறது. நன்றி
மகளிருக்கான முதலாவது பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வீராங்கனைகளை தேர்வுசெய்வதற்கான ஏலம், மும்பையில் இன்று நடைபெறுகிறது. நன்றி
துபாய்: DP World ILT20 லீகின் முதல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்றது கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி. டெசர்ட் வைபர்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்காக பேட்டிங்கில் கிறிஸ் லின், ஷிம்ரோன் ஹெட்மயர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை இறுதிப் போட்டியில் வெளிப்படுத்தி இருந்தனர். துபாய் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. டெசர்ட்…
உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் மாரூப் பேட்டிங்கை தேர்வு செய்தார். 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை எடுத்தது. தொடக்க வீராங்கனைகள் முனீபா அலி 12 ரன்களும், ஜவேரியா கான் 8 ரன்களும் எடுத்தனர். கேப்டன் மாரூப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 56…
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, நாக்பூர் மைதானத்தில் இன்று பயிற்சி மேற்கொள்ள அனுமதி கேட்ட நிலையில், அந்த மைதானத்தில் தண்ணீரை தெளித்த விதர்பா கிரிக்கெட் சங்கத்தின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா வெறும் 91 ரன்களில் மடிந்தது. முதல்…
ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்களை சுழற்பந்து வீச்சில் மிரட்டி அஷ்வின் – ஜடேஜா இணைக்கு சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக, அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வரும் அதாரு அதாரு பாடலின் மீம்ஸ் வெர்ஷன் ரசிக்கும்படியாக உள்ளது. இதனை அஷ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள்…
சென்னை: மாநிலங்களுக்கு இடையிலான 84-வது இளையோர் மற்றும் ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதன் 4-வது நாளான நேற்று யு-19 மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் கர்நாடகாவின் யஷஸ்வினி கோர்படே 11-8, 11-9, 7-11, 8-11, 13-11, 11-9 என்ற செட் கணக்கில் ஹரியாணாவின் சுகானா சைனியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார். யு-19 மகளிர் இரட்டையர் பிரிவில் டெல்லியின் லக்சிதா நரங், அவிஷா…
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மோசமான ரிக்கார்டை நாக்பூர் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி ஏற்படுத்தியுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா படுதோல்வியை சந்தித்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 177 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 91 ரன்களும் எடுத்தது. இந்த 91 ரன்கள் இந்தியாவுக்கு எதிராக இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய அணி எடுத்த மிகக் குறைவான ஸ்கோர் ஆகும். முன்னதாக, 2004-05-ல் மும்பையில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி 93…
கம்மின்ஸ் வீசி எதிர்கொண்ட தனது இன்னிங்ஸின் முதல் பந்தையே பவுண்டரியாக மாற்றித்தான் ஆட்டத்தைத் தொடங்கினார் ரோஹித். அந்த ஓவரிலேயே இன்னமும் இரண்டு பவுண்டரிகள் வந்து சேர்ந்தன. அங்கிருந்து கம்மின்ஸின் பந்துகள் மட்டுமல்ல லயானின் ஓவர்களும் அவரால் சூறையாடப்பட்டன. சில மாதங்களுக்கு முன்பாக ஓடி ரன் சேர்க்கத் திணறுகிறார் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வதில்லை என்ற குறை லிமிடெட் ஃபார்மேட்டில் அவர் மீது வைக்கப்பட்டது. ஆனால் இப்போட்டியில் அதிலும் அவர் தன்னைச் செம்மைப்படுத்திக் கொண்டிருந்தார்.ரோஹித் சர்மாRafiq Maqboolமுதல் பாதி மொத்தமும்…
பிட்ச் சர்ச்சைகளெல்லாம் ஓய்ந்து விடும் என்று கருதினாலும் மீண்டும் நிச்சயம் நாக்பூர் டெஸ்ட் பற்றி எழுக்கூடும். இந்திய அணி முதல் இன்னிங்சில் 400 ரன்களைக் குவிக்க முடிந்த பிட்சில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 32.3 ஓவர்கள்தான் ஆட முடிந்துள்ளது. 91 ரன்களில் சுருண்டு ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை வெறும் பிட்சைக் குற்றம்சாட்டி தப்பிக்க முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும். ரவீந்திர ஜடேஜாவின் முன்னேற்றமடைந்த இடது கை ஸ்பின் பவுலிங், அவரது…
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 400 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 223 ரன்கள் முன்னிலையில் உள்ளது.இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் மோதும் நிலையில், மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி…