Browsing: அரசியல்

மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான காப்பீடு தேதியை 30ம் தேதி வரை நீடிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

சென்னை:மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, கொளப்பாக்கம் கணேஷ் நகர் பகுதியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருவள்ளூர் நகர் மணப்பாக்கத்தில் சுமார் 500 வீடுகள் கன மழையால் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். இப்போது மழை கொஞ்சமாகதான் பெய்துள்ளது. வடகிழக்கு பருவ மழை துவங்கி 10 நாட்கள்தான் ஆகியுள்ளது. கனமழை பெய்யவில்லை. அந்த அளவுக்கு…

சொல்லிட்டாங்க…

* குழந்தைகள் எப்போதும் பெற்றோர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும், தாய்நாட்டை நேசிக்க வேண்டும். – குடியரசு தலைவர் திரவுபதி முர்மு* டிவிட்டரின் சான்பிரான்சிஸ்கோ தலைமை அலுவலக ஊழியர்களின் ஓராண்டு உணவு செலவு ரூ.10,560 லட்சம். – டிவிட்டர் சிஇஓ மஸ்க்* மேற்குவங்க அரசுக்கு எதிராக நடக்கும் சதியின் ஒரு பகுதியாக, கட்சிக்கு எதிராக பிரசாரம் நடக்கிறது. – மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி* மழையால் சேதமடைந்த நெற் பயிருக்கான இழப்பீட்டினை அரசு ஹெக்டேருக்கு 75,000 ரூபாயாக தர…

அனைத்து உரிமைகளும் குழந்தைகளுக்கு உறுதியாக கிடைக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் நாள் வாழ்த்து

சென்னை: குழந்தைகளுக்கு அனைத்து உரிமைகளையும் கிடைப்பதை உரித்தாக்க தமிழக அரசு இந்த நாளில் உறுதி ஏற்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு குழந்தைகள் மேல் கொண்ட மாறாத அன்பின் நினைவாகவும், குழந்தைகள் அவர் மீது கொண்ட நேசத்தின் அடையாளமாகவும், அவருடைய பிறந்த நாளான நவ.14ம் நாளை குழந்தைகள் நாளாகக் கொண்டாடி வருகிறோம். நேரு குறித்து ‘நேருவும் குழந்தைகளும்’, ‘நேரு தந்த…

திமுக ஆட்சியில் மேற்கொண்ட பணிகளால் சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை

சென்னை: திமுக ஆட்சியில் மேற்கொண்ட பணிகளால் சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை. மழைநீர் வடிகால் மூலம் உடனுக்குடன் வடிந்து விடுகிறது என்று அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கூறியுள்ளனர். சென்னை சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலை, பஜார் சாலை, ஜோன்ஸ் சாலை, அண்ணா சாலை, ஈக்காட்டுதாங்கல் உள்வட்டச் சாலை, பூந்தமல்லி சாலை, கலைமகள் சாலை, அண்ணா பிரதானச் சாலை, காமராஜர் சாலை, பாரதிதாசன் சாலை மற்றும் துரைப்பாக்கம் போன்ற பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதா, மழைநீர் வடிகால்வாயில், அடைப்பின்றி மழைநீர் வேகமாக…

இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு நீதி, ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு ஒரு நீதியா?.. கே.எஸ்.அழகிரி கேள்வி

சென்னை: கிண்டியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; 25 ஆண்டுகளாக ஏராளமான தமிழக கைதிகள் சிறையில் இருக்கிறார்கள், அவர்களை விடுதலை செய்யாதது ஏன்? சந்தேகத்தின்பேரில் சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்யாதது ஏன்? இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு நீதி, ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு ஒரு நீதியா? என கேள்வி எழுப்பியுள்ளார். Source link

10% இடஒதுக்கீடு குறித்து இன்று நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணிக்க திட்டம்? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை

சென்னை: பொருளாதார அடிப்படையிலான 10 சதவீத இடஒதுக்கீடு குறித்து இன்று நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணிக்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு குறித்து பாஜ அரசு 2019ல் நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறது. இந்த சட்டத்திற்கு எதிரான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நடந்தபோது, அந்த வழக்கில் எப்படியெல்லாம் நம்முடைய வாதங்களை எடுத்துச் சொல்ல வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து…

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் எனக்கு வாக்களித்தவர்கள் ஒருபோதும் பாஜகவில் சேரமாட்டார்கள்!: அசாம் முதல்வரின் கருத்துக்கு சசிதரூர் பதிலடி

கவுகாத்தி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சசிதரூருக்கு வாக்களித்தவர்கள் விரைவில் பாஜகவில் இணைவார்கள் என்று அசாம் முதல்வர் கூறிய நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து சசிதரூர் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த மாதம் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான  தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன்  கார்கே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு நேரு  குடும்பம் அல்லாத ஒருவர் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த  தேர்தலில் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு 7,897 வாக்குகள் கிடைத்தன.…

2024 மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளர் அகிலேஷ் யாதவ்?: பரூக் அப்துல்லா கருத்தால் பரபரப்பு

லக்னோ: எதிர்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் பட்டியலில் அகிலேஷ் யாதவ் பெயர் இடம் பெற்றிருப்பது தொடர்பாக பரூக் அப்துல்லா கூறிய கருத்துகள், ெடல்லியில் அரசியல் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா நேற்று உத்தரபிரதேச மாநிலம் லக்னோ வந்தார். சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர்…

2017ல் பாஜகவுக்கு ‘ஷாக்’ கொடுத்தது போல் குஜராத்தில் 15 நாளில் 25 மெகா பேரணி: சோனியா, ராகுல், பிரியங்கா பிரசாரம்

அகமதாபாத்: குஜராத்தில் 2017 சட்டமன்றத் தேர்தலின் போது ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்ததால், அப்போது காங்கிரஸ் 99 இடங்களை கைப்பற்றியது. அதேபோல் தற்போது பாஜகவுக்கு ஷாக் கொடுக்க காங்கிரஸ் வியூகம் வகுத்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிந்த நிலையில், தற்போது குஜராத் சட்டப் பேரவை தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி ஆயத்தமாகி வருகிறது. வரும் டிசம்பர் 1, 5ம் தேதிகளில் இரண்டு கட்டமாக குஜராத்தில் தேர்தல் நடப்பதால், அடுத்த 15 நாட்களில் 125 சட்டமன்ற…

ஒரு நாள் பயணமாக சென்னை வந்த அமித்ஷாவுடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு: அதிமுக மோதல் குறித்து ஆலோசனை; எடப்பாடி புறக்கணிப்பு

சென்னை: ஒரு நாள் பயணமாக சென்னை வந்த அமித்ஷாவை, ஓபிஎஸ் திடீரென சந்தித்து பேசினார். அப்போது எடப்பாடி மீது பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்ததாக கூறப்படுகிறது. பாஜக தன்னை தொடர்ந்து புறக்கணித்து வந்ததால், அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமியும் புறக்கணித்தார். சென்னையில் இன்று நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி விமானம் மூலம் நேற்று நள்ளிரவு சென்னை வந்தார். சென்னை வந்த அவரை ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜ தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற…

1 65 66 67 68 69 161