Browsing: அரசியல்

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை: ஜெயக்குமார் திட்டவட்டம்..!

சென்னை: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை பட்டினப்பாக்கத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; ஓ.பன்னீர்செல்வம் விவகாரத்தில் பொதுக்குழு மூலம் நிரந்தர தீர்வு எடுக்கப்பட்டுவிட்டது. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் படி கட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். அதிமுகவின் உள் விவகாரங்களில் பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ தலையிடவில்லை. பாஜகவின்…

காங்கிரஸ் கட்சியை கோயிலாக கருதுகிறேன்; உயிருள்ள வரை காங். கட்சியில் இருப்பேன்: ரூபி மனோகரன் பேட்டி

நெல்லை: காங்கிரஸ் கட்சியை கோயிலாக கருதுகிறேன் என ரூபி மனோகரன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் வரை நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் அக்கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக குழுவின் தலைவர் கே.ஆர்.ராமசாமி காலையில் அறிவித்தார். ஆனால், மாலையில் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையை நிறுத்தி வைத்து மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக நெல்லையில் தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளர் ரூபி…

சொல்லிட்டாங்க…

தற்போது நடக்கும் சட்டமன்ற தேர்தல் அடுத்த 25 ஆண்டுகளில் குஜராத்தின் தலைவிதியை தீர்மானிக்கும். : – பிரதமர் மோடிதமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதல் அரசமைப்பு சட்ட அதிகாரங்களுக்கு எதிராக வரம்பு மீறி தொடர்ந்து பேசியும், செயல்பட்டும் வருகிறார். :- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிஒரு மதசார்பற்ற நாட்டில் மதத்தின் அடிப்படையில் சட்டங்கள் இருக்கக் கூடாது. :- உள்துறை அமைச்சர் அமித்ஷாமக்கள் நலனுக்காக விதிகளை மீறும்போது தணிக்கை துறையினர் குறைகளை பெரிதுபடுத்தக் கூடாது. :- புதுச்சேரி முதல்வர்…

மக்களவை தேர்தலில் அகிலேஷ் போட்டி – Dinakaran

கன்னுஜ்: 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் கன்னுஜ் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் சூசகமாக தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் கன்னுஜ்ஜில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார். அப்போது, மெயின்புரியில் அகிலேஷ் போட்டியிடாது குறித்தும்  அவரது மனைவியை போட்டியிட செய்வது குறித்தும் நிருபர்கள்  கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கிலேஷ் யாதவ், ‘2024ம் ஆண்டு தேர்தல் திரும்ப நடைபெறும். தேர்தலில் போட்டியிடுவது நமது பணியாகும். சும்மா இருந்து…

இரண்டு அணியிலும் மாறி மாறி இணைகின்றனர் நேற்று ஓபிஎஸ்… இன்று இபிஎஸ்…நாளை…? குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள்

சென்னை: இபிஎஸ் அணியில் இணைந்தவர்கள் மீண்டும் ஓபிஎஸ் அணியில் இணைவதும், ஓபிஎஸ் அணியில் இணைந்தவர்கள் மீண்டும் இபிஎஸ் அணியில் இணைந்து வருவதால் அதிமுக தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இரண்டு அணிகளிலும் தினந்தோறும் ஆதரவாளர்களை இழுக்கும் படலமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இபிஎஸ் ஆதரவாளர்கள் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் நட்சத்திர ஓட்டலில்,…

காங்கிரஸ் கட்சியில் இருந்து ரூபி மனோகரன் தற்காலிக நீக்கம்: ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி உத்தரவு

சென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து ரூபி மனோகரன் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15ம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்டத் தலைவரை மாற்ற வேண்டுமென ரூபி மனோகரன் ஆதரவு நிர்வாகிகள் சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அது மோதலாக வெடித்ததைத் தொடர்ந்து 3 பேர் காயமடைந்தனர். இதற்கு ரூபி மனோகரன்தான் காரணம் என குற்றம்சாட்டப்பட்டு, அவர் விளக்கம் அளிக்க…

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பதில் உள்ள குழப்பம் போக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழ்நாட்டில் மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை ஆன்லைன் வழியாக இணைப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. ஆதார் எண்ணை இணைக்க முடியாதவர்களால் மின்சாரக் கட்டணத்தை செலுத்த முடியவில்லை. அதனால் மின் சந்தாதாரர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மின்வாரிய சீர்திருத்தத்திற்காக ஆதார் இணைப்பு செய்யப்படுவது வரவேற்கத்தக்கது தான். ஆதார் இணைப்புக்கான இணையவழி இணைப்பு ஒரு வாரத்திற்கு முன்பு தான் வெளியிடப்பட்டது. அடுத்த சில நாட்களிலேயே லட்சக்கணக்கானோர்…

பாஜ தலைவர் பதவியில் இருந்து என்னை கூட மேலிடம் மாற்றலாம்: அண்ணாமலை தழுதழுப்பு பேட்டி

சென்னை: தமிழக பாஜ தலைவர் பதவியில் இருந்து என்னை கூட கட்சி மேலிடம் மாற்றலாம் என அண்ணாமலை தழுதழுத்த குரலில் பேட்டியளித்தார்.அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:பாஜவில் இரண்டு நபர்கள் தனிப்பட்ட முறையில் கருத்து வேறுபாடு குறித்து பேசி இருக்கிறார்கள். இதுகுறித்து, விசாரணை கமிட்டி நாளை(இன்று) திருப்பூரில் இரு தரப்பையும் அழைத்து விசாரிக்க உள்ளது. இதில், இரு தரப்பிலும் விசாரணை நடைபெறும்.  பாஜவின் லட்சுமண ரேகையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி. யாரையும் விடப்போவதில்லை. கட்சியில் களையெடுக்கும் நடவடிக்கை…

6 பேர் விடுதலையில் நீதிமன்றம் கண்டனம் ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜினாமா செய்ய வேண்டும்: நெல்லையில் முத்தரசன் ஆவேசம்

நெல்லை: உச்சநீதிமன்றம் கண்டனத்தை ஏற்று தார்மீக அடிப்படையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜினாமா செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார். நெல்லையில் ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் மாநில மாநாடு வரும் டிசம்பர் 1 முதல் 3ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது. இதற்கான ஆயத்த கூட்டம் நெல்லை சிந்துபூந்துறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க வந்த மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி; பாஜ  இந்தியாவை…

42 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு; மேலும் 12 அதிருப்தி வேட்பாளர்கள் சஸ்பெண்ட்: பாஜக தலைமை நடவடிக்கை

சூரத்: குஜராத்தில் 42 எம்எல்ஏக்களுக்கு சீட் மறுக்கப்பட்ட நிலையில் அவர்களில் பலர் சுயேட்சையாக களம் இறங்கியுள்ளதால், அவர்களை பாஜக தலைமை சஸ்பெண்ட் செய்து வருகிறது. குஜராத்தில் வரும் டிச. 1, 5ம் தேதிகளில் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளன. ஆளும் பாஜகவில் முக்கிய நிர்வாகிகள் பலருக்கு சீட் மறுக்கப்பட்டதால், அவர்கள் சுயேட்சையாக களம் கண்டுள்ளனர். இவர்களின் போட்டியில் பாஜகவால் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தலில்…

1 60 61 62 63 64 161