Browsing: அரசியல்

குறுவை பயிர் காப்பீடு அறிவிப்பு அரசுக்கு வேல்முருகன் கோரிக்கை

சென்னை: குறுவை பயிர் காப்பீடு செய்வதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜூலை மாதம் 31ம் தேதிக்குள் குறுவை பயிருக்கான காப்பீடு செய்ய வேண்டுமென்று ஏற்கனவே ஒன்றிய அரசு அறிவித்துள்ள நிலையில், காப்பீடு செய்வதற்கான நிறுவனம் எது என்று தமிழ்நாடு அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனவே, குறுவை பயிர் காப்பீடு செய்வதற்கான காப்பீட்டு நிறுவனம் எது என்ற…

புதுச்சேரி மாநில செயலாளராக ஓம்சக்தி சேகர் நியமனம் அதிமுகவில் புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிவிப்பு: ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

சென்னை: அதிமுகவில் புதிய மாவட்ட நிர்வாகிகளை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுகவில் அமைப்பு செயலாளராக, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன், ஜெயலலிதா பேரவை செயலாளராக பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன், வக்கீல் அணி தலைவராக திருமாறன், வக்கீல் பிரிவு செயலாளராக ஆர்.வி.பாபு நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு என்று இருந்த மாவட்டங்கள் 4ஆக…

வணிக வரித்துறையில் ‘எனது விலைப்பட்டியல் எனது உரிமை’ திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது!!

சென்னை : பொதுமக்கள் தாங்கள் பெறும் சரக்கு அல்லது சேவைக்கான விலைப்பட்டியலை கேட்டுப்பெறுவதை ஊக்குவிக்கும் விதமாக வணிக வரித்துறையில் ‘எனது விலைப்பட்டியல் எனது உரிமை’ என்ற திட்டம் செயல்படுத்தப்படுத்த அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘பொதுமக்கள் தாங்கள் பெறும் சரக்கு அல்லது சேவைக்கான விலைப்பட்டியலை கேட்டுப் பெறுவதை ஊக்குவிக்கும் விதமாக வணிகவரித் துறையில் ‘எனது விலைப் பட்டியல் – எனது உரிமை’ என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில்…

எடப்பாடி பழனிச்சாமிக்கு லேசான மயக்கம்: அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு

சென்னை: அதிமுக ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுள்ளார். ஆர்ப்பாட்டம் நடைபெற்றரு வரும் பகுதியில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி; மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்துவரி உயர்வால் மக்கள் துன்பத்தில் உள்ளனர். எங்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுங்கள் என…

மாணவிகள் மரணங்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் பள்ளி மாணவிகள் மர்மமான முறையில் இறப்பதும், தற்கொலைக்கு முயல்வதும் பெரும் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்படுத்துகிறது. மாணவி ஸ்ரீமதியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மண்ணின் ஈரம் கூட இன்னும் காயாத நிலையில் திருவள்ளூரில் மற்றொரு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கி உள்ளது. சேலத்தில் அரசு பள்ளி மாணவி 2வது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவமும், செங்கல்பட்டில் பள்ளி மாணவி ஒருவர்…

சொல்லிட்டாங்க…

24 மணி நேரமாக எனது சிம்கார்டு செயல்படவில்லை. பாஜ தலைவர்களுடன் பேசியதால் என் செல்போன் அழைப்புகள் திருப்பிவிடப்பட்டுள்ளன. :- துணை ஜனாதிபதி வேட்பாளர் மார்கரெட் ஆல்வாதமிழக பாஜ தலைவர் அண்ணாமலை ஒரு ஊசி வெடி மாதிரி. இதுவரை எவ்வளவு குற்றச்சாட்டுகளை சொல்லி இருக்கிறார். :- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிபள்ளி மாணவிகளின் மர்ம மரண வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டாலும், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரிக்க குழு அமைக்க வேண்டும். : – தேமுதிக தலைவர் விஜயகாந்த்நான்…

‘இபிஎஸ், ஓபிஎஸ்சை பிரதமர் சந்தித்தால் நல்லது நடக்கும்’ பாஜ வளர்வது எங்களுக்கு மகிழ்ச்சியே: மாஜி அமைச்சர் மாபா பேட்டியால் அதிமுகவினர் அப்செட்

காரியாபட்டி: பாஜ வளர்வது எங்களுக்கு மகிழ்ச்சியே. சென்னை வரும் பிரதமர், தோழமைக் கட்சி தலைவர் என்ற முறையில் இபிஎஸ், ஓபிஎஸ்சை சந்திப்பது அவரின் உரிமை. அதில் நல்லது நடக்கும் என நம்புகிறேன் என முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் பேசியதால் அதிமுகவினர் அதிர்ச்சியடைந்தனர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் அதிமுக கிழக்கு மாவட்டம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன், அளித்த பேட்டி: அதிமுகவின் ஒற்றைத் தலைமையின் பலம் டெல்லி வரை…

நீ பத்துன்னா… நான் பதினைஞ்சு… எடப்பாடி ஏட்டிக்குபோட்டி நீக்கம்

சென்னை: முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 15 பேர் கட்சியில் இருந்து நீக்கம் செய்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: கழகத்தின் கொள்கைகளுக்கும், குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும்,…

எம்.சி.சம்பத், ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு என முன்னாள் அமைச்சர்கள் 5 பேர் உள்பட 10 பேரை அதிமுகவில் இருந்து நீக்கினார் ஓபிஎஸ்

சென்னை: எம்.சி.சம்பத், ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு என 5 முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 10 பேரை அதிமுகவில் இருந்து நீக்கி ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால், சிறுணியம் பி.பலராமன் (திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர்), எம்.சி.சம்பத் (முன்னாள் அமைச்சர்), சொரத்தூர் ராஜேந்திரன் (அனைத்துலக எம்ஜிஆர் மன்ற…

எடப்பாடி பதவிக்கு வைத்திலிங்கம் நியமனம்

சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் எம்எல்ஏ நியமிக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். ஏற்கனவே இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக இடைக்கால ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜெ.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட பலரையும் நீக்கி வருகிறார். இதற்கு பதிலடியாக ஓ.பன்னீர்செல்வமும் அதிமுக ஒருங்கிணைப்பாளராக தொடர்ந்து நான்தான் செயல்பட்டு வருகிறேன் என்று கூறி, எடப்பாடி ஆதரவாளர்களை நீக்கி வருகிறார். இப்படி இரண்டு பேரும் போட்டி போட்டு…

1 117 118 119 120 121 161