Browsing: அரசியல்

இரட்டை இலை சின்னத்தை தேர்வு செய்த அதிமுகவின் முதல் எம்பி மாயத்தேவர் காலமானார்

சின்னாளபட்டி:  இரட்டை இலை சின்னத்தை தேர்வு செய்த அதிமுகவின் முதல் எம்பி மாயத்தேவர் காலமானார். சின்னாளபட்டியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே டி.உச்சப்பட்டியில் 1934, அக்.15ம் தேதி பிறந்தவர் மாயத்தேவர். அதிமுக முதல் எம்பியான இவர், நேற்று மதியம் திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் உள்ள அவரது இல்லத்தில், தனது 88வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். எம்ஏ, பிஎல் பட்டம் பெற்ற இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக…

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு துரோகிகள்தான் காரணம்: தர்மபுரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

தர்மபுரி: கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு உடன் இருந்த துரோகிகள் தான் காரணம் என்று தர்மபுரியில் நடந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று சேலத்தில் இருந்து கார் மூலம் தர்மபுரிக்கு வந்தார். அவருக்கு முன்னாள் அமைச்சரும், தர்மபுரி மாவட்ட அதிமுக செயலாளருமான கே.பி.அன்பழகன் தலைமையில் மாவட்ட அதிமுக சார்பில் மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தர்மபுரி மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்திற்கு…

சொல்லிட்டாங்க…

‘ஹம் தோ, ஹாமாரே தோ’ என்ற லாபத்திற்காக புதிய விதிகள், நிபந்தனைகளை கொண்டு வந்து பழங்குடியின மக்களின் உரிமைகளை பறிப்பதற்கு சதி நடக்கிறது. – காங்., முன்னாள் தலைவர் ராகுல் காந்திஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல. இப்போது, அரசியல் அலுவலகமாகவும் மாற்றப்படுகிறது. இது, தமிழக மக்கள் நலனுக்கு விரோதமானது. – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்வழக்கு மூலம் எங்களை முடக்க நினைக்கின்றனர். அது ஒருபோதும் முடியாது. கடந்த தேர்தலில் அதிமுக தோல்விக்கு நம்முடன்…

சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்விக்கு உடன் இருந்த துரோகிகள் தான் காரணம்: ஓபிஎஸ் மீது எடப்பாடி தாக்கு

தர்மபுரி: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக எடப்பாடி பழனிசாமி இன்று தர்மபுரி வந்தார். அவருக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கே.பி.அன்பழகன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: நான் சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து படிப்படியாக உயர்ந்து இன்று தொண்டர்கள் ஆசியால் இடைக்கால பொதுச்செயலாளராக உள்ளேன். அதிமுகவை ஒருபோதும் அழிக்க முடியாது. அதிமுகவை திட்டமிட்டு முடக்க சில துரோகிகள் முயற்சி செய்கின்றனர். அவற்றை…

அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? இனியும் பொறுப்போமா?.. கே.பாலகிருஷ்ணன் ட்வீட்

சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்ரவியை நடிகர் ரஜினிகாந்த் திடீரென நேற்று சந்தித்து பேசினார். அப்போது, அரசியல் பற்றி பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் கூறினார். இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் ஆளுநரிடம் அரசியல் பேசியதாக ரஜினிகாந்த் கூறியதற்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? இனியும் பொறுப்போமா? தமிழ்நாடு ஆளுநரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்து பேசி…

சொல்லிட்டாங்க…

மின்சார சட்டத்திருத்தம் மிகவும் ஆபத்தானது. இதை அமல்படுத்துவதில் ஒன்றிய அரசு தீவிரம் காட்டக்கூடாது. – டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்பாஜவின் ஆட்டத்தையும், கொட்டத்தையும் அடக்கும் பூமியாக தமிழகம் உள்ளது. அம்பானி, அதானிகளுக்காக மோடி ஆட்சி நடத்துகிறார். – மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடுதலை போராட்டத்தில் காங்கிரசின் பங்கை எவரும் மூடி மறைத்திட முடியாது. ஆனால், தேசிய கொடியின் மீது பாஜவுக்கு திடீர் பற்று ஏற்பட்டுள்ளது. – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிஅதிமுக என்பது மக்களால் உருவாக்கப்பட்ட கட்சி. மற்றவர்களால் இதை…

அனுமதியின்றி பேரணி நடத்திய பாஜவினர் 50 பேர் மீது வழக்கு

அண்ணாநகர்: திருமங்கலத்தில் அனுமதியின்றி பேரணி நடத்திய பாஜவினர் 50 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, பாஜவினர் பல்வேறு இடங்களில் பேரணி நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போலீசாரின் அனுமதியின்றி சென்னை திருமங்கலத்தில் இருந்து பாடி மேம்பாலம் வரை பாஜ மேற்கு மாவட்ட தலைவர் மனோகர் தலைமையில், 50க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை தேசிய கொடியுடன் பேரணி சென்றனர். இதன் காரணமாக, அப்பகுதியில் கடும்…

மகாராஷ்டிரா அமைச்சரவை ஆகஸ்ட் 15-க்குள் விரிவாக்கம்: தேவேந்திர பட்னாவிஸ் தகவல்

டெல்லி: மகாராஷ்டிராவில் அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்கள் பாஜக.வுடன் இணைந்து கடந்த ஜூன் 30-ம் தேதி புதிய அரசை ஆட்சியில் அமர்த்தினர். மகாராஷ்டிராவின் முதல்வராக சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸும் பதவியேற்றனர். ஆனால் ஒரு மாதத்துக்கு மேலாகியும் இன்னும் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறவில்லை. அமைச்சரவை விரிவாக்கம் தாமதமாவதற்கு தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுகுறித்து துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்கள்…

ஊதிய ஒப்பந்த 6வது கட்ட பேச்சுவார்த்தை அதிமுக ஆட்சியில் பறிக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் வழங்கப்படும்: பே மேட்ரிக்ஸ் முறை ஊதியம் அமல்? போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் உறுதி

சென்னை: அதிமுக ஆட்சியில் பறிக்கப்பட்ட சலுகைகள் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மீண்டும் வழங்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார். தமிழகத்தில் 8 போக்குவரத்து கழகங்களில் 1.25 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கடந்த 1.9.2019 முதல் அமலாகி இருக்க வேண்டும். இதற்கான பேச்சுவார்த்தை அதிமுக ஆட்சியில் 2 முறையும், திமுக ஆட்சியில் 3 முறையும் நடந்தது. இந்நிலையில், 6வது கட்ட பேச்சுவார்த்தை நேற்று குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி…

சொல்லிட்டாங்க…

பாலியல் வழக்கில் மரண தண்டனை விதிக்கும் நிர்பயா சட்டம் அமலுக்கு வந்த பிறகு, பெண்கள் அதிகளவில் கொல்லப்படுகிறார்கள். – ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட். நான் எனது கட்சியில் இருந்து விலகுகிறேன். ஐக்கிய ஜனதா தளம் ஒரு மூழ்கும் கப்பல். அதில் எப்படி நான் பயணிப்பது. – முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆர்.சி.பி.சிங்.2024-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் பாஜ ஆட்சி முறியடிக்கப்பட வேண்டும். தேர்தலுக்கு முன்பு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்று சேர வேண்டும். – இந்திய…

1 111 112 113 114 115 161