Browsing: அரசியல்

நெய்வேலி அனல் மின் நிலைய பணியில் தமிழர்கள் புறக்கணிப்பா? திமுக கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்களின் கேள்விக்கு ஒன்றிய அமைச்சர்கள் பதில் அளித்துள்ளனர். நெய்வேலி அனல் மின்நிலைய பணி விவகாரம் தொடர்பாக ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை, திமுக எம்பி டி.ஆர்.பாலு நேற்று சந்தித்து பேசினார். இதையடுத்து, டி.ஆர்.பாலு நிருபர்களிடம் கூறியதாவது: இளநிலை பொறியாளர்கள், தேர்வு அகில இந்திய அளவில் நடத்தப்படுவது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த முறை இளநிலை பொறியாளர்  தேர்வுக்கு 5.97 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 30,816 பேர்.  இதில் 1.12…

மோடி மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன்: ராகுல் காந்தி ஆவேசம்

புதுடெல்லி:  ‘மோடியின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன்’ என ராகுல் காந்தி கூறியுள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இயக்குனர்களாக உள்ள, ‘யங் இந்தியா’ அமைப்புக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சீல் வைத்தனர். இதைத் தொடர்ந்து, சோனியா காந்தியின் டெல்லி வீட்டை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டதால்  பரபரப்பு ஏற்பட்டது. இந்த பிரச்னையை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பி.க்கள் எழுப்பினர்.இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில்…

அதிமுக அலுவலக சாவியை எடப்பாடியிடம் அளித்தது தவறு: உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு

சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரிடையே யாருக்கு அதிகாரம் என்ற உச்சகட்ட பிரச்னை எழுத்துள்ளது. இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி அதிமுக பொதுக்குழு கடந்த மாதம் 11ம் தேதி நடந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு திடீரென ஓ.பன்னீர்செல்வம் சென்றதால், இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அதிமுக அலுவலகத்திற்குள் கதவை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் ஒ.பன்னீர்செல்வம்…

என்எல்சியில் 75% தமிழர்களை நியமிக்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 75% பேரை நியமிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர்அறிக்கை: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இயந்திரவியல், மின்னியல், கட்டிடவியல், சுரங்கவியல், வேதியியல், நிலத்தியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 299 பொறியாளர்களை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தேர்ந்தெடுத்து இருப்பதாகவும், இந்த 299 பொறியாளர்களில் ஒருவர்கூட தமிழ்நாட்டை சேர்ந்தவர் இல்லை என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் இச்செயல் கடும் கண்டனத்திற்குரியது.முதல்வர்…

அதிமுகவிடம் வாய்க்கொழுப்பு வேண்டாம் பின்விளைவுகள் கடுமையாக இருக்கும்: சீமானுக்கு ஜெயக்குமார் ஆவேசம்

சென்னை: வாய்க்கொழுப்பை அதிமுகவிடம் காட்டினால், பின்விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று சீமானுக்கு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: எம்ஜிஆர் இன்று அல்ல, நாளை அல்ல உலகம் முழுவதும் என்றும் போற்றப்படக்கூடிய தலைவர். அவருக்கு நினைவுச் சின்னம் தொப்பியும், கண்ணாடியுமாம். தமிழன் ஏற்றம் பெறுவதற்கும், தலை நிமிர்ந்து நிற்பதற்கும் காரணம் அண்ணா. அவருடைய…

அமமுகவின் பொதுக்குழு ஆகஸ்ட் 15ம் தேதி நடக்க உள்ளதாக டிடிவி தினகரன் அறிவிப்பு

சென்னை: அமமுகவின் பொதுக்குழு ஆகஸ்ட் 15ம் தேதி நடக்க உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஜெயலலிதா அவர்களின் மக்கள் நலக்கொள்கைகளை தொடர்ந்து நிலைநாட்டிட போராடி வரும் நமது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்பழகன் அவர்களின் தலைமையில் வரும் 15.08.2022 திங்கள்கிழமை அன்று காலை 9 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ்…

ஆன்லைன் சூதாட்டம் தடுக்க அவசர சட்டம் தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாசின் டிவிட்டர் பதிவு: ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.5 லட்சம் பணத்தை இழந்த வேதனையில் ராசிபுரம் அருகே சுரேஷ் என்ற பட்டதாரி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஆன்லைன் சூதாட்டம் ஒருவரை எந்த அளவுக்கு அடிமையாக்கும் என்பதற்கு தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் கடிதம் தான் சாட்சியம். பணம் இருந்தால் 5 நிமிடம் கூட ஆன்லைன் ரம்மி ஆடாமல் இருக்க முடியவில்லை என்று இளைஞர் சுரேஷ் கடிதம் எழுதி வைத்திருக்கிறார். வல்லுனர் குழுவே…

ஊராட்சிமன்ற தலைவர் படுகொலை: முத்தரசன் கண்டனம்

சென்னை: ஊராட்சிமன்ற தலைவர் படுகொலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியத்தின் தாளவேந்திரம் ஊராட்சியின் தலைவர் மூர்த்தி நேற்று முன் தினம் இரவு, கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சமூகவிரோதிகளின் கோழைத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தப் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய, இதற்கு துணை போன அனைவரையும் உடனடியாக கைது செய்து, சட்டத்தின் சந்து, பொந்துகளில் தப்பி விடாமல் தண்டிக்கும் வகையில் காவல்துறையினர்…

கனல் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?.. அதிமுக கேள்வி

சென்னை; வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பாஜக நிர்வாகி சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக ஆட்சி இருந்திருந்தால் கனல் கண்ணன் மீது இந்நேரம் நடவடிக்கை பாய்ந்திருக்கும் எனவும் கூறினார். Source link

நாட்டையே அதானி, அம்பானிக்கு விற்பனை செய்து விடுகின்றனர்: சீமான் விமர்சனம்

சென்னை: நாட்டையே அதானி, அம்பானிக்கு விற்பனை செய்து விடுகின்றனர் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என விமர்சனம் செய்துள்ளார். டீ விற்றார் என்று சொல்வதை நம்பும் மக்கள், மோடி நாட்டை விற்கிறார் என்று சொல்வதை நம்புவதில்லை. 5 மாநில தேர்தல் வரவில்லை என்றால் விலையை குறைத்து இருக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார். Source link

1 113 114 115 116 117 161