Browsing: அரசியல்

‘எங்களுக்கு பங்காளி முறைதான்…’ திமுக அரசு சிறப்பாக செயல்பட விருப்பம்: செல்லூர் ராஜூ பேட்டி

மதுரை: திமுக அரசு சிறப்பாக செயல்பட வேண்டுமென்பதே எங்களது விருப்பமென முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரை பழங்காநத்தம் சோமசுந்தரம் பாரதியார் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை விழா நேற்று  நடந்தது. தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ  கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். பின்பு அவர் நிருபர்களிடம் கூறும்போது,  ‘‘அதிமுக தொடர்பான வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் எங்களுக்கு  கவலையில்லை. எடப்பாடியார் தலைமையின் கீழ்தான் தற்போது  அதிமுக தொண்டர்கள்  உள்ளனர்.…

சொல்லிட்டாங்க…

மக்களை காக்கும் அரசாக மட்டும் இல்லாமல், மண்ணையும் காக்கும் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது. :- முதல்வர் மு.க.ஸ்டாலின்தமிழகத்தின் ஆளுநர் பொறுப்பை ஆர்.என்.ரவி ஏற்றதிலிருந்து, தன் ஆர்.எஸ்.எஸ் முகத்தை வெளிப்படையாக காண்பித்துக் கொண்டிருக்கிறார். :- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிநமது ஜனநாயகத்தில் மக்கள் யாரை ஆசீர்வதிக்கிறார்களோ, அவர் மாநில முதல்வராக பதவி வகிப்பார். :- கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமிசுங்கச்சாவடிகளின் கட்டண வசூல் வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாற்றப்படாத நிலையில், ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்துவது அநீதியானது. : -…

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் ஓபிஎஸ்சுடன் நடிகர் பாக்கியராஜ் சந்திப்பு!

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன் நடிகர் பாக்கியராஜ் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் ஓ.பன்னீர்செல்வத்தை நடிகர் பாக்கியராஜ் சந்தித்து பேசினார். விழுப்புரம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். Source link

ஜனநாயகத்துக்கு புறம்பான ஒரு சர்வாதிகாரத்தை பழனிசாமி தனது பணத்தால் கட்டமைக்க முயற்சிக்கிறார்: மருது அழகுராஜ்

சென்னை: ஜனநாயகத்துக்கு புறம்பான ஒரு சர்வாதிகாரத்தை பழனிசாமி தனது பணத்தால் கட்டமைக்க முயற்சிக்கிறார் என மருது அழகுராஜ் கூறியுள்ளார். அதிமுகவின் தலைமையை தொண்டர்கள் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். Source link

கொடநாடு வீட்டில் யார் ஆட்சியில் கொள்ளை நடந்தது சட்டம், ஒழுங்கை பற்றி பேச எடப்பாடிக்கு அருகதை இல்லை: ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்

சென்னை: ஜெயலலிதாவின் கொடநாடு வீட்டில் கொள்ளை யார்  ஆட்சியில் நடந்தது. சட்டம், ஒழுங்கைப்பற்றி பேசுவதற்கு  எடப்பாடிக்கு என்ன அருகதை இருக்கிறது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். இதுகுறித்து, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டி:   கொங்கு மண்டலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.  மக்கள் வெள்ளம் கூடி அவரை  வரவேற்றது. இதை எல்லாம் பார்த்து தாங்கிக்கொள்ள முடியாமல்தான் பேட்டி என்ற பெயரில் இல்லாததையும், பொல்லாததையும் எடப்பாடி  பேசியிருக்கிறார். வெள்ளலூரில் பேருந்து நிறுத்தத்தை கிடப்பில் போட்டு …

தேமுதிக எழுச்சியாகத்தான் உள்ளது: பிரேமலதா பேச்சு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி, தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், அனைத்துக்கட்சி தலைவர்களும் விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்தனர். தனது பிறந்தநாளையொட்டி நேற்று பகல் 12 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு விஜயகாந்த் வந்தார். இதனால், கட்சி அலுவலகத்தில் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அவர்கள் விஜயகாந்தை பார்த்ததும் உற்சாகம் அடைந்து கோஷங்கள் எழுப்பினர். அவர்களை பார்த்து…

ஆறுக்குட்டி போல பல குட்டிகள் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வர தயாராக உள்ளனர்: திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி

சென்னை: ஆறுக்குட்டி போல பல குட்டிகள் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வர தயாராக உள்ளனர் என திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார். இதைப்பார்த்து தாங்கிக்கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிசாமி எதாவது அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார் என எம்.பி. ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். Source link

அருணாச்சலில் ஒரே ஜேடியு எம்எல்ஏ பாஜ.வில் ஐக்கியம்

இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 15 இடங்களில் போட்டியிட்டு 7 இடங்களில் வென்றது. 41 இடங்களில் வென்ற பாஜவுக்கு அடுத்து 2வது பெரிய கட்சியாக இருந்தது. ஆனால், கடந்த 2020ம் ஆண்டு ஐக்கிய ஜனதா தளத்தின் 6 எம்எல்ஏக்கள் கூண்டோடு பாஜவுக்கு தாவினர். இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளத்திற்கு எஞ்சியிருந்த ஒரே எம்எல்ஏ டெசி கசோவும் நேற்று பாஜவில் இணைந்தார்.…

டெண்டர் முறைகேடு வழக்கில் எடப்பாடி தப்ப முடியாது: தஞ்சையில் டிடிவி.தினகரன் பேட்டி

தஞ்சாவூர்: நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு வழக்கில் இருந்து எடப்பாடி பழனிசாமி தப்ப முடியாது என டிடிவி தினகரன் கூறினார்.தஞ்சாவூரில் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் நேற்று அளித்த பேட்டி: இந்தியாவில் பிரதமரை தேர்ந்தெடுப்பதில் அமமுக ஒரு அணிலை போல் செயல்படுவோம். பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் கருத்தை வரவேற்கிறேன். அதே நேரத்தில் சில துரோகிகள், துரோக சிந்தனை உள்ளவர்கள் திருந்தினால் தான் இவர்கள் சிந்தனை நிறைவேறும் என்றார். அதிமுக, அமமுக இணையும் போது ஒற்றை தலைமை இருக்க…

அமலாக்கத்துறையிடம் இருந்து டிடிவி.தினகரன் தன்னை பாதுகாத்து கொள்ளட்டும்: கோவையில் எடப்பாடி பதிலடி

பீளமேடு: கோவை கோல்டுவின்ஸ் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்புவதற்காக கோவை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: சிறு,  குறு, நடுத்தர தொழில்களுக்கான மின்சார கட்டண உயர்வு பற்றி பரிசீலிக்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார். அதை உடனே செய்ய வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தமிழக அரசு தடை செய்ய வேண்டும். அது குறித்து கருத்து கேட்பு கூட்டம்  ஏற்கக்கூடியது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.…

1 103 104 105 106 107 161