சென்னையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகம் செல்ல முடிவு செய்து தமிழகம் முழுவதும் இருந்து கட்சியினரை வரவழைக்கும் ஓபிஎஸ் திட்டம் தோல்வி: போலீஸ் அனுமதி மறுத்ததால் திடீர் பின்னடைவு
சென்னை: அதிமுக கட்சி தலைமை அலுவலகத்துக்கு எடப்பாடியை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும் செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து அதிமுக தொண்டர்களை வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், நீதிமன்ற அனுமதி வாங்கி வந்தால்தான் பாதுகாப்பு தர முடியும் என்று அவருக்கு போலீசார் பதில் அளித்துள்ளால் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக சிறப்பு பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றம் சென்றார். நீதிமன்றமும்,…









