Browsing: செய்திகள்

பழனி முருகன் கோயிலில் ஒலித்த 'உங்க விஜய்' பாடல்; இளைஞர் அட்ராசிட்டி – போலீஸில் புகார்!

பழனி முருகன் கோயிலில் ஒவ்வொரு தைப்பூசத்தின் போதும் ஏராளமான பக்தர்கள் முருகனை தரிசிக்க வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் முருகன் கோயிலுக்கு எளிதாகச் செல்வதற்கு யானை பாதையைத்தான் பயன்படுத்துவார்கள். இதனால் யானை பாதையில் கூட்டம் அதிகளவில் இருக்கும். பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்துவதற்காக கோயில் நிர்வாகத்தின் சார்பில் யானை பாதையில் குறிப்பிட்ட தூரத்திற்கு இடையிடையில் ஒலிப்பெருக்கிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.தைப்பூசம் முடிந்து இரண்டு நாள்கள் கழித்து முருகன் கோயிலுக்கு மாலை அணிந்து வந்த இளைஞர் ஒருவர், யானை பாதையில்…

பறவைக் காய்ச்சல் குறித்து தமிழ்நாடு அரசு கூறும் அறிவுரை என்ன?

தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் மனிதர்களிடத்தில் உறுதி செய்யப்படவில்லையென்றாலும் மக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை பொது சுகாதார துறை வெளியிட்டுள்ளது. மேலும், “திடீரென இறந்த கோழிகளின் இறைச்சியை சாப்பிட வேண்டாம், ஆஃப்-பாயில் சாப்பிட வேண்டாம் என” என அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். Source link

பியூஷ் மானுஷ் வழக்கு: அண்ணாமலை மீது கோர்ட் அதிரடி நடவடிக்கை; சம்மன் அனுப்ப உத்தரவு! | Piyush Manush case: Court takes action against Annamalai; Orders to issue summons!

அது குறித்து சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷிடம் பேசினோம். அவர், “அண்ணாமலை ஒரு கூட்டத்தில்,`கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கடவுளைப் பற்றிப் பேசலாம். நம்பிக்கை இல்லாதவர்கள் பேசினால் ரத்த அபிஷேகம் செய்வோம்’ எனப் பேசியது பொதுமக்களுக்கும், நாத்திகர்களுக்குமான நேரடி மிரட்டல். இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், தற்போது தமிழக அரசிடமிருந்து இரண்டாவது முறையாக வழக்குத் தொடர அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இன்று நீதிமன்றம் இந்த வழக்கைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு, அண்ணாமலைக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.`2000 ஆண்டுகளாகப் பாரம்பர்ய தீபாவளி பட்டாசுக்கு…

எப்ஸ்டீன் ஆவணங்கள், டிரம்ப் குறித்து நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியது என்ன?

பட மூலாதாரம், Sansad TV11 பிப்ரவரி 2026, 15:29 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்நாடாளுமன்றத்தில் இன்று (பிப்ரவரி 11) பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணங்கள், அனில் அம்பானி, அதானி, இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பல விவகாரங்களை எழுப்பினார்.அனில் அம்பானி மற்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மீது ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்.ராகுல் காந்தி ‘ஆதாரமற்ற…

`ராஜா அப்படிப்பட்டவர் அல்ல… தவறான கணிப்பில் இப்படி’ – சர்ச்சை சம்பவம் குறித்து சாலமன் பாப்பையா

இந்த நிலையில், சாலமன் பாப்பையா இந்த விவகாரம் தொடர்பாக தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “தமிழ் மக்களுக்கு என் அன்பான வணக்கம். தம்பி ராஜாவைப் பற்றி ஒரு தவறான செய்தி நம்முடைய ஊடகங்களில் போய்க்கொண்டிருப்பதை நான் காண்கிறேன், கேட்கிறேன். யாரோ ஒரு தாய் அறிந்தோ அறியாமலோ அவரை பற்றி ஒரு தவறான கணிப்பிலே இந்தச் செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். ராஜா என்னுடைய பண்ணையிலே 45 ஆண்டுகளுக்கு மேலே இருக்கிறார்,…

வங்கதேச தேர்தலை இந்தியா உற்றுநோக்குவது ஏன்? 4 முக்கிய காரணங்கள்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, அண்டை நாட்டில் நடக்கும் ஒரு வழக்கமான பொதுத் தேர்தலை டெல்லி இவ்வளவு நீடித்த கவனத்துடன் பின்தொடர்வது அரிதானது.கட்டுரை தகவல்வங்கதேசத்தில் பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெற உள்ள பொதுத் தேர்தலை இந்தியா எதிர்பார்ப்பு மற்றும் கவலையின் அசாதாரண கலவையுடன் கவனித்து வருகிறது என்பது டெல்லியில் நன்கு புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அண்டை நாட்டில் நடக்கும் ஒரு வழக்கமான பொதுத் தேர்தலை டெல்லி இவ்வளவு நீடித்த கவனத்துடன் பின்தொடர்வது அரிதானது.இதற்கான முதன்மையான காரணம் இந்தத் தேர்தல்…

பரபரப்பான மும்பை வி.டி ஸ்டேஷனில் ஷூட்; 1 கோடிக்கு செட் – ‘காதலர் தினம்’ படத்தின் சுவாரஸ்யங்கள்! |Shoot at the bustling Mumbai VT Station; Set for 1 crore – Interesting facts about the film ‘Valentine’s Day’!

காதலர் தினத்தை முன்னிட்டு “உயிருள்ளவரை உஷா’, ‘மௌனம் பேசியதே’, ‘மின்னலே’, ‘காதலர் தினம்’ ஆகிய திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் ஆகின்றன. இதில் இயக்குநர் கதிர் இயக்கத்தில் 1999-ம் ஆண்டு வெளிவந்த ‘காதலர் தினம்’ 90ஸ் கிட்ஸுக்கு அத்தனை பேவரிட் என்றே சொல்லலாம். பலருக்கும் பேவரிட்டான இத்திரைப்படம் இந்த வாரம் ‘காதலர் தினம்’ ஸ்பெஷலாக திரைக்கு வருகிறது. இத்திரைப்படத்திற்கு இயக்குநர் கதிர் ஏன் காதலர் தினம் என்கிற டைட்டில் வைத்தார் தெரியுமா?1999-ல், ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் இதே கேள்விக்கு…

ஜெஃப்ரி எப்ஸ்டீன் சிறையில் இறந்த போது என்ன நடந்தது? பிரேத பரிசோதனை விபரங்கள்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஜெஃப்ரி எப்ஸ்டீன்கட்டுரை தகவல்எச்சரிக்கை: இந்தச் செய்தியில் சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.ஜெஃப்ரி எப்ஸ்டீன் உயிரிழந்த உடனேயே எடுக்கப்பட்ட புகைப்படங்களை அமெரிக்க அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதுவரை பார்த்திராத இந்தப் புகைப்படங்கள், அவரது உடல் ஒரு ஸ்ட்ரெச்சரில் இருப்பதையும், மருத்துவப் பணியாளர்கள் அவருக்கு சிகிச்சை அளிப்பதையும் காட்டுகின்றன.எப்ஸ்டீன் சிறையில் இருந்தபோது நிகழ்ந்த மரணம் குறித்த எஃப்.பி.ஐ விசாரணை அறிக்கையின் ஒரு பகுதியாக இருபது படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் பல படங்கள் பார்ப்பதற்கு ஏற்றதாக இல்லை.…

`டி.என்.பி.எஸ்.சி.யில் அரசியல் தலையீடா?' – முன்னாள் தலைவர் ஆர்.நடராஜ் என்ன சொல்கிறார்?

கடந்த ஞாயிற்றுக் கிழமை டி.என்.பி.எஸ்.சி திட்டமிட்டிருந்த குரூப் 2 தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் ரத்து செய்யப்பட்ட‌ நிலையில், தேர்வாணையத்தின் முன்னாள் தலைவரும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியுமான நடராஜிடம் பேசினோம்.”முதல்ல ஜூன் ஜூலையில் தான் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு வந்தது. நான் தலைவரா ஆனதுமே அதை ஜனவரிக்கு மாத்தினேன். தேர்வு அட்டவணை பக்காவா போட்டு நடத்தறதுல யு.பி.எஸ்.சி அவ்வளவு பர்ஃபெக்ட்.அப்பப்ப யு.பி.எஸ்.சி யில இருந்து மாநில தேர்வாணையங்களை அழைத்து மீட்டிங் போடுவாங்க. என்…

இந்தியா உடன் பாகிஸ்தான் விளையாட முடிவெடுத்தது குறித்து அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images10 பிப்ரவரி 2026, 12:42 GMTபுதுப்பிக்கப்பட்டது 10 நிமிடங்களுக்கு முன்னர்டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்க பாகிஸ்தான் எடுத்த முடிவு இப்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது, மேலும் இது குறித்து பாகிஸ்தானிலும் அதிக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இதை ‘பாகிஸ்தானின் வெற்றி’ என்று விவரிக்கின்றனர்.ஜியோ நியூஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரஷீத் லத்தீப், “இந்த முடிவுக்கு, பாகிஸ்தானுக்கு இலங்கை அதிபர் நன்றி…

1 81 82 83 84 85 529