சாகித்ய அகாடமி: பால சாகித்ய புரஷ்கர் மற்றும் யுவபுரஷ்கர் விருதுகள் அறிவிப்பு !| news about Bala Sahitya Purashkar and Yuvapurashkar Awards Announcement
சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் தனித்துவமான எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் பால சாகித்ய புரஸ்கார் யுவ புரஸ்கார் விருதுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான சாகித்ய விருதுகள் தலைநகர் டெல்லியில் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு மலையாளம்,இந்தி போன்ற பல மொழிகளில் வெளியாகியுள்ள கவிதை, கட்டுரை, சிறுகதை போன்றவற்றிற்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழில் சிறுகதைக்காக சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது எழுத்தாளர் ஜி.மீனாட்சிக்கு வழங்கப்படவுள்ளது. அவரது ‘மல்லிகாவின் வீடு’ என்ற சிறுகதைக்காக…









