சென்னை: வழக்கமான ஸ்டைலில் நிதி நிறுவன மோசடி; ஏமாந்த முதலீட்டார்கள் – பெண் ஊழியர் கைது பின்னணி | lady arrested in cheating case, police investigating regarding finance company
சென்னை அயனாவரம் சோமசுந்தரம் 6-வது மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜீ. இவரின் மனைவி பார்கவி (31) இவர் நொளம்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில் கூறியிருப்பதாவது, “நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். சென்னை முகப்பேரில் செயல்பட்டு வரும் நிதி நிறுவன குறித்து கேள்விபட்டு நான் ரூ. 16,44,000 முதலீடு செய்தேன். ஆனால் அவர்கள் என்னுடைய பணத்தை ஏமாற்றிவிட்டார்கள். அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களை நான் நேரில் சந்தித்து பல தடவை என்னுடைய பணத்தைக் கேட்டேன். அப்போது பவுன்ஸர்களை…







