தமிழ்நாடு: நாய் வளர்க்க ரூ.5000 கட்டணமா? நாய் வளர்ப்புக் கொள்கையின் புதிய விதிகள் என்ன?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப் படம்கட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்2 அக்டோபர் 2024புதுப்பிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர்தமிழ்நாட்டில் வீடுகளில் நாய்களை வளர்ப்பது, இனப்பெருக்கம் செய்வது ஆகியவை குறித்து புதிய கொள்கை ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி அறிவிக்கப்பட்டுள்ள நாய் வளர்ப்பு உரிமம் பெறுவதற்கான கட்டுப்பாடுகளும் கட்டணமும் ஏழை மக்களை பெரிதும் பாதிக்கும் என்கின்றனர், விலங்குகள் நல ஆர்வலர்கள்.அரசின் கொள்கையில் சிரமம் இருந்தால் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்கின்றனர், கால்நடைத்துறை அதிகாரிகள்.வீடுகளில் நாய்களை வளர்ப்பதற்கு புதிய…









