Browsing: செய்திகள்

Health: உணவை நொறுங்கத் தின்றால் 100 வயது வாழலாமா? டயட்டீஷியன் சொல்வது என்ன?

‘பசித்துப் புசி, ருசித்துப் புசி’ என்று சொன்னது எல்லாம் வெறும் வார்த்தைகளாக மாறிவிட்ட அவசர உலகம் இது. அவசர அவசரமாய் நாலு வாய் அள்ளிப்போட்டுக் கொண்டு அடுத்த வேலைக்குச் செல்லும் இயந்திர வாழ்வில் இரவு உணவையாவது ரசித்து, ருசித்துச் சாப்பிடுகிறோமா என்றால், அதுவும் இல்லை.டிவியைப் பார்த்துக்கொண்டும், செல்போனைப் பார்த்துக்கொண்டும் ஏதோ கடமைக்குச் சாப்பிட்டுவிட்டு எழுகிறோம்.நொறுங்கத் தின்றால் 100 வயது என்பதில் உண்மை இருக்கிறதா என்று, டயட்டீஷியன் காயத்ரி சொல்கிறார்.உணவு…செரிமானம் என்ற செயல் வாயில் தொடங்கி, மலக்குடல் வரை…

இந்தியாவில் ஐபோன் வேண்டாம் என கூறும் டிரம்ப் – இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கப்படுமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இந்தியாவில் ஐபோன் தயாரிப்பதை விரும்பவில்லை என ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக்கிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.அதே சமயம், உற்பத்தியை அமெரிக்காவுக்கு மாற்றுவது பொருளாதார ரீதியாக சாத்தியமற்றது மற்றும் புவிசார் அரசியல் ரீதியாக சிக்கலானது என தொழில்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகளுடன் தொடர்புடைய ஒரு மூத்த ஆலோசகர் பிபிசி தமிழிடம் பேசும்போது, பெரிய அளவிலான மின்னணு உற்பத்திக்கு தேவையான திறமையான தொழிலாளர்…

இறந்த தாயின் வெள்ளி கொலுசைக் கேட்டு, தகனத்தை தடுத்து நிறுத்திய மகன்… ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்

ராஜஸ்தானில் ஒரு மகன் வெள்ளி வளையலுக்காக தனது தாயாரின் சிதையில் ஏறி படுத்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை சேர்ந்தவர் புரி தேவி. இவருக்கு 7 மகன்கள் இருக்கின்றனர். இதில் 6 மகன்கள் ஒன்றாக வசிக்கின்றனர். ஓம்பிரகாஷ் என்ற மகன் மட்டும் கிராமத்திற்கு வெளியில் தனியாக வசித்து வந்தார். அவருக்கும் மற்ற சகோதரர்களுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளாக சொத்துப் பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் புரி தேவி உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து…

இந்தியா – பாகிஸ்தான் பகைமையின் முக்கிய காரணங்கள்: 1947 முதல் இன்று வரை

29 நிமிடங்களுக்கு முன்னர்கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உள்பட்ட காஷ்மீரில் உள்ள ”பயங்கரவாத இலக்குகளை” குறிவைத்து தாக்கியதாக இந்தியா கூறியது.இந்தியாவின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து இருநாடுகள் இடையிலான பதற்றம் அதிகரித்தது.கடந்த சில தசாப்தங்களாகவே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 1947 பிறகு இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு இரண்டு நாடுகள் இடையே பதற்றத்தை அதிகரித்த நிகழ்வுகள்…

“வரலாம், வந்துக்கொண்டிருக்கலாம்”- கூட்டத்தில் பங்கேற்காத அன்புமணி; கேஷுவலாக பதிலளித்த ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் பாமக மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் பல மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. குறிப்பாக பாமக தலைவர் அன்புமணி இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “சட்டப்பேரவை தேர்தலில் 50 தொகுதிகளில் ஜெயிப்பதற்கான வித்தைகளைச் சொல்லி கொடுத்தேன்.இராமதாஸ் – அன்புமணி`பாமக-வில் நானே ராஜா’50 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளைப் பகிர்ந்துக்கொல்வதற்கான கூட்டம் இது. செயல்பட முடியவில்லை என்று யாரும் விருப்பம் தெரிவித்தால் விரும்பியப்படி…

இந்தோனீசியா: பேறுகாலத்தில் மனைவிகளின் மன அழுத்தத்தைக் குறைக்க பயிற்சிகள் பெறும் கணவர்கள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகாணொளிக் குறிப்பு, பேறுகாலத்தில் மனைவிகளின் மன அழுத்தத்தைக் குறைக்க பயிற்சிகள் பெறும் கணவர்கள்!பேறுகாலத்தில் மனைவிகளின் மன அழுத்தத்தைக் குறைக்க பயிற்சிகள் பெறும் கணவர்கள் 5 நிமிடங்களுக்கு முன்னர்பேறுகாலத்தில் தங்களின் மனைவிகளுக்கு ஏற்படும் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம் தொடர்பான பிரச்னைகளை அறிந்து கொள்ள கணவர்கள் பலர் ஒன்று கூடி பயிற்சி வகுப்புகளுக்கு வருகின்றனர். இந்தோனீசியாவின் ஜகார்தாவில் ஒன்று கூடிய இந்த ஆண்கள் சமைப்பது மட்டுமின்றி, பேறுகாலத்தில் ஏற்படும் மன அழுத்தம்…

தமிழ்நாடு ஆளுநர் விவகாரம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை மாற்றுமா குடியரசுத் தலைவரின் கேள்வி?

பட மூலாதாரம், Getty Images10 நிமிடங்களுக்கு முன்னர்’ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் மாநில மசோதாக்களைக் கையாளும் விவகாரத்தில், உச்ச ​​நீதிமன்றம் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி காலக்கெடுவை விதிக்க முடியுமா’ என உச்ச நீதிமன்றத்திடம் கருத்து கேட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ‘குறிப்பு’ (Presidential reference) ஒன்றை அனுப்பியுள்ளார்.இந்திய அரசியலமைப்பின் 143வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட இந்தக் குறிப்பில், “மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட மசோதாவை, ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் நடைமுறைப்படுத்த முடியுமா?”…

DD Next Level; santhanam; டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் கோவிந்தா கோவிந்தா சர்ச்சையான நிலையில், அப்பாடலின் டியூனை படத் தயாரிப்பு நிறுவனம் மியூட் செய்திருக்கிறது

நடிகர் சந்தானம் நடித்துள்ள “டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் (DD Next Level)’ திரைப்படம் நாளை (மே 16) திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது. இவ்வாறிருக்க, இப்படத்தில் இடம்பெற்றுள்ள, ‘கோவிந்தா… கோவிந்தா…’ பாடலுக்கெதிராக ஒருதரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது.இப்பாடல், வெங்கடேஸ்வராவை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.ஜி.டி.பாலாஜி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தார்.சென்னை உயர் நீதிமன்றம்தனது மனுவில், பக்தி பாடலின் வரிகளை மாற்றி, படத்துக்கு சம்பந்தமில்லாமல் வெங்கடேஸ்வரரை அவமதிக்கும் வகையில்…

நைஜீரியா: சமூக கட்டுப்பாடுகளை உடைத்து ஆட்டோ ஓட்டும் பெண்கள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகாணொளிக் குறிப்பு, சமூக கட்டுப்பாடுகளை உடைத்து ஆட்டோ ஓட்டும் நைஜீரிய பெண்கள்சமூக கட்டுப்பாடுகளை உடைத்து ஆட்டோ ஓட்டும் நைஜீரிய பெண்கள்24 நிமிடங்களுக்கு முன்னர்நைஜீரியாவில் கேகே மருவா என அழைக்கப்படும் இந்த ஆட்டோக்கள் அங்கு மலிவான மற்றும் பிரபலமான போக்குவரத்து ஆதாரமாக உள்ளது. ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய இந்த வேலையில், பொருளாதார நெருக்கடியால் பெண்களும் இப்போது ஆட்டோ ஓட்டுகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு தன் கணவர் இறந்த பின் யெமிசி ஆட்டோ…

1 211 212 213 214 215 531