Browsing: செய்திகள்

சந்நியாசம் 2.0 : DINK தம்பதிகளின் வாழ்க்கைமுறை – இது பொருளாதாரப் புரட்சியா? | My Vikatan author shares about her views about DINK lifestyle

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்DINK வாழ்க்கை முறை ஏன் இன்று தவிர்க்க முடியாத பேசுபொருளாக மாறியுள்ளது? இது ஒரு தற்காலிகப் பொருளாதார அதிர்ச்சியின் விளைவா, அல்லது பெண்கள் தேடிய நிரந்தர விடுதலைக்கான வழியா? இந்தக் கட்டுரை, தமிழர் வாழ்வியல் முதல் தற்கால உலகப் போக்கு வரை, DINK வாழ்க்கை முறையின்…

கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு – தீர்ப்பு குறித்து நடிகை பேசியது என்ன?

பட மூலாதாரம், IMRAN QURESHIகேரளாவில் நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு குறித்துப் பேசிய அந்த நடிகை, தனது அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை என்று கூறினார். 2017-ஆம் ஆண்டு ஒரு நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கேரள செஷன்ஸ் நீதிமன்றம் டிசம்பர் 12 அன்று தீர்ப்பு அளித்தது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து அந்த நடிகை ஞாயிற்றுக்கிழமை அன்று பேசியுள்ளார். நீதிமன்றம் தனது ‘அடிப்படை உரிமைகளைப்’ பாதுகாக்கவில்லை என்று அவர்…

விலங்குகள் தங்கள் குட்டிகளை உண்ணக் காரணம் என்ன?

விலங்குகள் சில நேரங்களில் தங்கள் சொந்தக் குட்டிகளையே கொன்று தின்னும் பழக்கத்தைக் கொண்டுள்ளன. சுவீடன் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் அனீஷ் போஸ் இது குறித்துக் கூறுகையில், “தங்கள் குட்டிகளையே உண்ணும் பழக்கம் விலங்குகளிடம் பரவலாகக் காணப்படுகிறது. இது அவற்றின் இனப்பெருக்க உத்திகளில் ஒன்றாகவே உள்ளது” என்று கூறியிருக்கிறார்.அனீஷ் போஸ் கூற்றுப்படி, ”எல்லா விலங்குகளும் இப்படிச் செய்வதில்லை. யானைகள், திமிங்கலங்கள் போன்ற விலங்குகள் நீண்ட காலத்திற்கு ஒரு குட்டியை மட்டுமே சுமந்து, அதைப் பாதுகாப்பாக வளர்க்கின்றன.…

ஐபிஎல் வீரர்கள் ஏலம்: சிஎஸ்கே அணியில் ஜடேஜா இடத்தை நிரப்பப் போவது யார்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப் படம்கட்டுரை தகவல்எழுதியவர், பிரதீப் கிருஷ்ணாபதவி, பிபிசி தமிழ்14 டிசம்பர் 2025புதுப்பிக்கப்பட்டது 36 நிமிடங்களுக்கு முன்னர்இந்தியன் பிரீமியர் லீக் 2026 தொடருக்கான ஏலம் வரும் செவ்வாய்க் கிழமை (டிசம்பர் 16) அபுதாபியில் நடக்க உள்ளது. இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்தெந்த இடங்களை நிரப்ப வேண்டும், எந்த வீரர்களை வாங்கக்கூடும் என்று பார்ப்போம்.சூப்பர் கிங்ஸிடம் என்ன இருக்கிறது?ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், கடந்த சீசனில்…

`எடப்பாடி பழனிசாமிக்கு அட்வைஸ்; விஜய் மீது மறைமுக விமர்சனம்' – உதயநிதி ஸ்பீச் ஹைலைட்ஸ்

திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில், தி.மு.க இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் திருவண்ணாமலை இன்று (டிசம்பர் 14) நடைபெற்றது.முதல்வர் ஸ்டாலின், மூத்த அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் உள்ளிட்டட பலர் கலந்துகொண்டனர்.திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம்கூட்டத்தில் பேசிய உதயநிதி, “இது ஏதோ கணக்கு காட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டம் கிடையாது, நம் எதிரிகள் போடுகின்ற தப்பு கணக்குகளை உடைக்கின்ற கொள்கை கூட்டம்.பொதுவாக இளைஞர்கள் அதிகமாகக் கூடினால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது…

சென்னையில் ஸ்குவாஷ் உலகக் கோப்பை: இந்திய அணி சாம்பியன்

பட மூலாதாரம், India Squashகட்டுரை தகவல்சென்னையில் நடந்த எஸ்டிஏடி (தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்) ஸ்குவாஷ் உலகக் கோப்பையை வென்றிருக்கிறது இந்திய அணி. ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) நடந்த இறுதிப் போட்டியில் ஹாங் காங் அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் ஆகியிருக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த இறுதிப் போட்டியில் 3-0 என இந்தியா வென்றது.ஸ்குவாஷ் உலகக் கோப்பையில் இதுதான் இந்தியாவின் இரண்டாவது பதக்கம்; முதல் தங்கம். இதற்கு முன்பு 2023 உலகக் கோப்பையில் இந்தியா மூன்றாவது…

வேட்பாளர்களை விஜய்தான் அறிவிப்பார்! – தவெக ஆனந்த் விளக்கம்!

தவெகவின் திருச்செங்கோடு தொகுதி வேட்பாளராக அருண் ராஜை நிர்வாகிகள் மத்தியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்தும் கொங்குமண்டல அமைப்புச் செயலாளர் செங்கோட்டையனும் அறிமுகப்படுத்தி வைப்பார்கள் என தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ஆனந்த் வேட்பாளர் பட்டியலை விஜய்தான் வெளியிடுவார் எனக் கூறியிருக்கிறார்.ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன்திருச்செங்கோடு தொகுதியில் தவெகவின் பூத் கமிட்டி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று நடந்திருந்தது. இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளரான அருண் ராஜை வேட்பாளராக…

பாகிஸ்தானிடம் நவீன சீன போர் விமானங்கள் இருந்தும் அமெரிக்க எப்16 விமானத்தையே இன்னும் சார்ந்திருப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்பாகிஸ்தானுக்கு எஃப்-16 போர் விமானங்களுக்கான தொழில்நுட்ப ஆதரவையும் உபகரணங்கள் விற்பனையையும் தொடர அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதுஅமெரிக்க டிஃபன்ஸ் செக்யூரிட்டி கோ-ஆபரேஷன் ஏஜென்சி (டிஎஸ்சிஏ) இதுதொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதன்படி, முன்மொழியப்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தத்தின் மொத்த அளவு 686 மில்லியன் அமெரிக்க டாலர்.பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானங்களை நவீனமயமாக்குவதும், அவற்றின் பயன்பாட்டின் போதான பாதுகாப்பு அபாயங்களை நிவர்த்தி செய்வதுமே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.…

நடுத்தர வயதில் ஏன் பயம் வருகிறது? – Why does fear arise in middle age? An expert provides guidance

நம் அனைவருக்குமே, நம் வாழ்வின் ஏதாவதொரு கட்டத்தில், வாழ்தலின் மீதான நம்பிக்கையும் பிடிப்பும் மிக அதிகமாக இருந்திருக்கும். அப்படியான நேரத்தில், `என்ன ஆனாலும் சரிப்பா, வாழ்ந்து பார்த்துடறேன்” என உற்சாகத்துடன் சொல்லி, வழக்கத்தைவிடவும் அதிக புத்துணர்ச்சியோடு செயல்பட்டிருப்போம்.இதேபோல, காரணமே இல்லாமல், `என்ன வாழ்க்கைடா இது’ எனத் துவண்டுபோவது, வாழ்வின் மீதுள்ள பிடிப்பு மொத்தமும் போய், `இனி என்ன செய்யுறது’ எனப் புரியாமல் திகைத்து நிற்பது, அடுத்தது என்ன என்ற கேள்வியும், அது தரும் பயங்களும்கூட இயல்பானதுதான். இது…

பாகிஸ்தான் பிரதமரை காத்திருக்க வைத்த புதின்? – துர்க்மெனிஸ்தானில் நடந்த சந்திப்பு

பட மூலாதாரம், screengrab/Pakistan PM’s officeபடக்குறிப்பு, வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12), பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், புதினை சந்தித்தார்.13 டிசம்பர் 2025, 12:58 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை ஒரு சர்வதேச அரங்கில் சந்தித்தது ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.’அமைதி மற்றும் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கான வழிகள்’ குறித்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்க ஷாபாஸ் ஷெரீப் துர்க்மெனிஸ்தானின் தலைநகரான அஷ்காபத்துக்குச் சென்றிருந்தார்.இந்த சர்வதேச மன்றத்தில் ரஷ்ய அதிபர் விளாதிமிர்…

1 109 110 111 112 113 529