ஒப்பந்தம், ஊதியம், வேலைப்பளு, ஷிஃப்ட் – செவிலியர்களின் குறைகள் களையப்படுமா? #InternationalNursesDay
1854-ம் ஆண்டில் கிரிமியாவைக் கைப்பற்றிய ரஷ்யாவுக்கு எதிராக இங்கிலாந்து, ஃபிரான்ஸ் போன்ற நாடுகள் போர் தொடுத்தன. கிரிமியா போரில் பாதிக்கப்பட்ட ராணுவப் படைவீரர்களுக்கு யாருமே உதவ முன்வரவில்லை. பலர் உயிரிழக்கும் நிலையில் இருந்தனர். அந்த ராணுவ மருத்துவமனைக்கு, 38 செவிலியர்களுடன் சென்றார் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல். வசதிக் குறைவுகள் அங்கு காணப்பட்டாலும், தன்னால் முடிந்தவரை ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளித்தார். உயிருக்குப் போராடிய முழுப்படையையும் தன்னிடமிருந்த குறைந்த மருத்துவ வசதியைக் கொண்டும், நிறைந்த அன்பாலும் குணப்படுத்தினார். அந்த இரவு வேளைகளில்…







