`அந்தக் குடும்பத்தை வைத்துதான் இம்முறை நிபாவை உடனடியாகக் கண்டறிந்தோம்!’ – கேரள மருத்துவக் குழு| How this alert doctor once again helped identify Nipah infection in Kerala
“ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு முதன்முதலில் நிபா பாதிப்பு தெரியவந்தது. உடனடியாக நாங்கள் அவர்களின் மருத்துவ வரலாற்றை கேட்டறிந்து ஆராய்ந்தோம். அப்போது அந்தக் குழந்தைகளின் தந்தை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி உயிரிழந்துள்ளார் எனத் தெரியவந்தது. பின்னர் நாங்கள் அந்த மருத்துவமனையைத் தொடர்பு கொண்டு விவரத்தைக் கேட்டறிந்தோம். அவர், நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் எனவும், உடனடியாக அவரது உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து அந்த நபர் மருத்துவமனையிலேயே உயிரிழந்துவிட்டார் எனவும்…





