பால் மூலமும் பரவும்… கால்நடைகளிலிருந்து தொற்றும் புரூசெல்லோசிஸ் நோயால் கேரளாவில் அச்சம்..!
கேரள மாநிலத்தில் வெளவால்களால் பரவும் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் நலம் அடைந்த நிலையில், கால்நடைகள் மூலம் பரவும் புரூசெல்லோசிஸ் நோய் கண்டறியப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் வட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த ஜோஸ் மற்றும் அவரின் மகன் ஜோபி ஆகியோருக்கு புரூசெல்லோசிஸ் நோய் பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவருக்கும் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜோஸ் தனது வீட்டில் பசுக்களை வளர்த்துவரும் நிலையில் அவற்றின் மூலம் புரூசெல்லோசிஸ் நோய் பரவியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.…








