Browsing: ஆரோக்கியம் | Health

பால் மூலமும் பரவும்… கால்நடைகளிலிருந்து தொற்றும் புரூசெல்லோசிஸ் நோயால் கேரளாவில் அச்சம்..!

கேரள மாநிலத்தில் வெளவால்களால் பரவும் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் நலம் அடைந்த நிலையில், கால்நடைகள் மூலம் பரவும் புரூசெல்லோசிஸ் நோய் கண்டறியப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் வட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த ஜோஸ் மற்றும் அவரின் மகன் ஜோபி ஆகியோருக்கு புரூசெல்லோசிஸ் நோய் பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவருக்கும் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜோஸ் தனது வீட்டில் பசுக்களை வளர்த்துவரும் நிலையில் அவற்றின் மூலம் புரூசெல்லோசிஸ் நோய் பரவியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.…

Doctor Vikatan: வாக்கிங் செய்தால்தான் சர்க்கரைநோய் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது உண்மையா?|Does walking help in controlling blood sugar level?

உதாரணத்துக்கு திங்கள், செவ்வாய், புதன்கிழமை நடந்துவிட்டு, வியாழக்கிழமை பிரேக் விடலாம். மீண்டும் வெள்ளி, சனிக்கிழமைகளில் நடந்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை பிரேக் எடுத்துக்கொள்ளலாம். திங்கள் முதல் வெள்ளிவரை நடந்துவிட்டு, சனி, ஞாயிறு பிரேக் எடுப்பதைத் தவிர்க்கவும்.நீரிழிவு நோய்வேகமாக நடக்க வேண்டுமா, கைகளை வீசி நடக்க வேண்டுமா என்றெல்லாம் சர்க்கரை நோயாளிகளுக்கு நிறைய சந்தேகங்கள் உள்ளன. நீங்கள் நடப்பதை உணர்ந்து நடக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டு நிதானமாக நடப்பது போல நடக்கக்கூடாது. தொடர்ந்து 30 நிமிடங்கள் நடக்க…

”பொண்ணு, மாப்பிள்ளையோட வந்து சண்டை போடுவாங்க…” காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 – 111 – If you have problems with sex, see a sexologist..!

தாம்பத்திய உறவு சார்ந்த பிரச்னைகள் இருந்தாலும், அதற்கான நிபுணரை (செக்ஸாலஜிஸ்ட்) சந்திப்பதற்கு இன்னமும் நம்முடைய சமூகத்தில் தயக்கம் இருக்கிறது. அது கூடவே கூடாது என்கிற செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், இது தொடர்பான தன்னுடைய கருத்தையும், கேஸ் ஹிஸ்டரி ஒன்றையும் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.”புதிதாக திருமணமானவங்க தாம்பத்திய உறவுல ஏதாவது பிரச்னைன்னா 6 மாதம் வரைக்கும்கூட உறவே இல்லாம இருந்துட்டு, அப்புறமா ஓடி வருவாங்க. அதுக்குள்ள பிரச்னை பெருசாகி அவங்களுக்குள்ள சண்டை வந்திருக்கும். பொண்ணு அம்மா வீட்டுக்குப் போய், சொந்தக்காரங்க எல்லாருக்கும்…

“தந்தையே எனக்கு இன்ஸ்பிரேஷன்” – ரூ.100 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை தொடங்கிய 16 வயது சிறுமி! |A 16-year-old Indian girl launched an AI company in 2022, it is now valued at Rs 100 crore

மியாமி டெக் வீக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது ஐடியாவை வெளிப்படுத்திய பின் 4,50,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 3.7 கோடி ரூபாய்) நிதியுதவியாக கிடைத்துள்ளது. அதன்பின்னர் Delv.AI நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார். இந்த நிறுவனத்தில் 10 டெக் நிபுணர்கள் கொண்ட குழுவினர் வேலை செய்கின்றனர். 2022-ல் 3.7 கோடி ரூபாய் நிதியில் இருந்து தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 100 கோடி ரூபாய். father and Daughter (Representational Image)Image by Ratna Fitry from…

Doctor Vikatan: நடிகை ஸ்ரீதேவி மரணத்துக்கு காரணமான low salt diet; உப்பை குறைப்பது உயிரைப் பறிக்குமா?

Doctor Vikatan: பொதுவாக அதிக உப்புதான் ஆபத்து என கேள்விப்பட்டிருக்கிறோம். நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தின் பின்னால் அவர் மிகக் குறைந்த அளவு உப்பு சேர்த்த உணவுப்பழக்கத்தைப் பின்பற்றியதுதான் காரணம் என ஒரு செய்தியில் பார்த்தேன். உப்பு குறைவாகச் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமானதுதானே…. இதை எப்படிப் புரிந்துகொள்வது?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்மருத்துவர் ஸ்பூர்த்தி அருண்Doctor Vikatan: கரும்பு ஜூஸ் ஆரோக்கியமானதா… சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின்படி, ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 5 கிராம்…

மனஅழுத்தமா, பதற்றமா? ஓடுங்க பாஸ், மருந்து வேண்டாம்… ஆய்வு சொல்லும் தகவல்! |Study says Running could ease depression better than medications

ஓடும் விதிகளைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு வார இறுதியிலும் 45 நிமிடம் ஓடும் பயிற்சி இருக்கும். ஆனால், ரன்னிங் குழுவில் இருந்த அனைத்து நபர்களாலும் 45 நிமிடம் வரை ஓட இயலவில்லை. அதே போல ஓடுவதில் அவர்கள் காட்டும் முனைப்பும் குறைவாகவே இருந்தது.ஆனால், மருந்துகளை எடுத்துக் கொள்ளும் குழுவில் இருந்த நபர்களில் பெரும்பாலானோர் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட மனஅழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகளை எடுத்துக்கொண்டனர். இவர்களுக்கு மூளையில் செரட்டோனின் அளவை அதிகரிக்கப் பயன்படுத்தப்படும் escitalopram என்ற மருந்து கொடுக்கப்பட்டது.இந்த இரண்டு குழுக்களிலுமே 44…

`என் மனநலனுக்கு நான் செய்யும் 5 விஷயங்கள் இவைதான்! – இன்ஸ்டா வீடியோவில் பகிர்ந்த ஸ்ருதிஹாசன் |Shruti Hassan shares special post regarding Mental Health

இரண்டாவது, சோஷியல் மீடியாவில் எனது இன்டராக்‌ஷன் மற்றும் ரிலேஷன்சிப். இது முற்றிலும் சோஷியல் மீடியாவை பற்றியது அல்ல. உண்மையில் மற்றவர்களின் கருத்துகள், அது எந்தளவில் என்னை பாதிக்கிறது அல்லது பாதிக்காமல் இருக்கிறது என்பதை பற்றியது. இதை அனைவரும் கடந்து வந்திருப்பீர்கள் என்று தெரியும்.  மூன்றாவதாக, தினசரி உடற்பயிற்சி மற்றும் ஃபிட்னஸ். இது உடலின் ரசாயனங்கள் மற்றும் ஹார்மோன்களை சமநிலையில் வைக்கிறது. அதோடு சிறந்த மனநிலையிலும் வைக்கிறது. ஸ்ருதிஹாசன்!@shrutzhaasanநான்காவதாக, என்னை நானே செக் செய்து கொள்வது. ஒட்டுமொத்தமாக இல்லாமல், `ஹே…

ஆண்கள் ஏன் `பெடிக்யூர்’ செய்துகொள்ள வேண்டும்..? | Legs and feet should be beautiful; Men should get pedicures

செம்ம லுக்…தொடர்ந்து பெடிக்யூர் செய்துக்கொள்வதால் உங்கள் கால்கள் பொலிவுடன் காணப்படும். மேலும், உங்கள் கால்களை கடினமாகவும், வறண்டு போக விடாமலும் பார்த்துக்கொள்ளும். நீங்கள் மாதத்திற்கு இருமுறை பெடிக்யூர் செய்துகொள்ளும் பட்சத்தில் அது உங்கள் கால்களை நீண்ட காலங்களுக்கு அழகானதாக வைத்துக்கொள்ள உதவும்.பெரும்பாலும் பெடிக்யூர் ட்ரீட்மென்டில் அரோமாதெரபியை பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் பயன்படுத்தப்படும் நறுமண தைலங்கள் உங்களுள் வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்தி மனதை இலகுவாக்குகின்றன. மேலும், உங்கள் மன அழுத்தங்கள் பறந்து மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள அரோமாதெரபி உதவுகிறது.…

வைட்டமின் சி: கை, கால் வலி போக்குவது முதல் காயங்களை ஆற்றுவது வரை… | Vitamin C: From relieving pain in hands and feet to healing wounds

சரும அழகிலும் ஆரோக்கியத்திலும் வைட்டமின் சியின் பங்கு அவசியமானது. சரும செல்கள் தினமும் உதிர்ந்து, புதிதாக உருவாகும். அந்தச் செயலைச் சரியாகச் செய்யவும் ரத்த நாளங்கள் ஆரோக்கியமாக இருக்கவும் வைட்டமின் சி சத்து அவசியமாகிறது. எலும்புகளின் இடையே `கார்ட்டிலேஜ்” எனப்படும் ஜவ்வுப்பகுதியானது குஷன்போல பாதுகாப்பாக இருக்கும்.  வயதாக ஆக இந்த ஜவ்வு தேய்ந்து, எலும்புகள் ஒன்றோடு ஒன்று உரசி, மூட்டுவலி, கை, கால்களில் வலி ஏற்படும். அதைத் தவிர்ப்பதற்கும், எலும்புகளின் ஆரோக்கியத்துக்கும் வைட்டமின்-சி மிக மிக அவசியம்.இரும்புச்சத்து கால்சியம்…

Doctor Vikatan: கரும்பு ஜூஸ் ஆரோக்கியமானதா… சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா? |Doctor Vikatan: Is it healthy to drink sugarcane juice?

அதற்காக தினமும் கரும்புச்சாறு குடிப்பது அறிவுறுத்தக்கூடியதல்ல. பொதுவாக மஞ்சள்காமாலை பாதிப்பின்போது கரும்புச்சாறு குடிக்கச் சொல்வார்கள். கல்லீரலில் தொற்று, வேறு பாதிப்புகள் ஏற்படும்போது, மஞ்சள் காமாலை தீவிரமாக இருக்கும்போது கரும்புச்சாறு குடிக்க அறிவுறுத்தப்படுவார்கள். உடலில் கார்போஹைட்ரேட் அளவு அதிகரித்து, பாதிக்கப்பட்ட கல்லீரல் சீரடைவதற்காக இதைக் குடிக்கச் சொல்வார்கள்.சர்க்கரைநோய் பாதிப்பு உள்ளவர்கள் கரும்புச்சாறு குடிக்கக்கூடாது. அதிலும் குறிப்பாக ஹெச்பிஏ1சி எனப்படும் மூன்று மாத சர்க்கரை சராசரி அளவு அதிகமாக இருப்பவர்கள் இதைக் குடிக்கவே கூடாது.பொதுவாகவே மருத்துவர்களும் ஊட்டச்சத்து நிபுணர்களும் யாரையும் ஜூஸ் குடிக்கச் சொல்ல மாட்டார்கள். பழமாகச் சாப்பிடும்போதுதான் நார்ச்சத்து முழுமையாகக் கிடைக்கும்.  பழங்களில்…

1 37 38 39 40 41 211