Browsing: ஆரோக்கியம் | Health

`அம்மாவுடன் நேரம் செலவிடுங்கள், அவர்களின் ஆயுள் அதிகரிக்கும்' – ஆய்வுத் தகவல்!

வயதாகும் போது பெரும்பாலான முதியவர்கள் ஓரம்கட்டப்படுகிறார்கள். திணிக்கப்படும் தனிமை ஒரு கட்டத்தில் வாழ்வின் அங்கமாகவே மாறிவிடுகிறது. பேச ஆளில்லாமல், சிலர் தமக்குத் தாமே பேசிக் கொள்வதையும் கவனித்து இருக்கலாம்.இந்தநிலையில் `அம்மா மற்றும் பாட்டியை வெளியில் அழைத்துச் செல்வது, அவர்களின் ஆயுசு நாள்களை அதிகரிக்கும்’ என்று ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. கலிஃபோர்னியா, சான் ஃபிரான்சிஸ்கோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், சராசரியாக 71 வயதுடைய 1,600 பெரியவர்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். சமூக பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் கட்டுப்பாட்டில் இருந்தாலும், தனிமையில் இருப்பவர்கள் அதிக…

Doctor Vikatan: சிங்கப்பூர், கேரளா, தமிழகத்தில் கொரோனா பரவல்… பழைய கதை திரும்புகிறதா?

Doctor Vikatan: 2019-20-ல் சிங்கப்பூரில்தான் முதலில் கொரோனா தொற்று ஆரம்பமானது. அடுத்து இந்தியாவில் கேரளாவில் அதிகரித்தது. மூன்று வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இப்போது மீண்டும் சிங்கப்பூரிலும் கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் புதியவகை கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக செய்திகளில் பார்க்கிறோம். இது மீண்டும் அச்சுறுத்தலாக மாற வாய்ப்பு உண்டா… ஆரம்பத்திலேயே தற்காத்துக்கொள்ள வழிகள் உண்டா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலிDoctor Vikatan: இரண்டு வயதுக் குழந்தையிடம் ஆட்டிசம் அறிகுறிகள்… பெற்றோர் செய்ய…

பெண்கள் கிளை சிறைவாசிகளுக்கு மனஅழுத்த கலை நிகழ்ச்சி; பாடல், விளையாட்டு என மகிழ்ச்சி! | Salem; Art Program for Women’s Branch Jail Inmates

சேலம் பெண்கள் தனிக்கிளைச்சிறையில் சிறைவாசிகளின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் குளிர்கால மன அழுத்த மாதம் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வருடத்தின் கடைசி மாதமான, குளிர்கால டிசம்பர் மாதத்தில் பொதுவாக பலருக்கும் மன அழுத்தம் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைவர் அமரேஷ் புஜாரி மற்றும் கோவை சரக சிறைத்துறை துணைத் தலைவர் சண்முக சுந்தரம் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் சேலம் பெண்கள் தனிக்கிளைச் சிறையில் மன அழுத்தத்தைப் போக்கும்…

”இவ வெளியில இருந்து வந்தவ. அதனாலதான்…” – காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -126 | kamathukku mariyathai: Sex Vs In Law problems

அவரிடம் பேசிய பிறகுதான், அவருடைய மாமியார் நிறைய மூட நம்பிக்கைகள் கொண்டவர் என்பதும், அதனால் வீட்டிலுள்ளவர்கள் தேவையில்லாத பிரச்னைகளை சந்தித்து வருகிறார்கள் என்பதும் தெரிய வந்தது. மாமியாருடைய மூடநம்பிக்கைகள் ஒருகட்டத்தில் இவரையும் பாதிக்க ஆரம்பிக்க, ‘நீங்க செய்றது தப்பு’ என்று மாமியாரிடம் எடுத்துச்சொல்ல ஆரம்பித்திருக்கிறார். அந்த மாமியாரோ, ‘இத்தனை நாள் நான் சொல்றதைக் கேட்டு நீங்க எல்லாரும் நல்லாதானே இருந்தீங்க… இப்போ இவ நம்ம வீட்டுக்கு வந்தப்புறம்தான் இவ்ளோ பிரச்னை… இவ வெளியில இருந்து வந்தவ. அதனாலதான்…

`300 சிறுநீரக கற்களை அகற்றிய மருத்துவர்கள்’… டீ தான் காரணமா? – மருத்துவர் கூறும் விளக்கம்! |Taiwan hospital removes over 300 kidney stones from woman

“கோடைக்காலத்திலும் வசந்த காலத்திலும் உடலில் ஏற்படும் நீரிழப்பு காரணமாக சிறுநீரக கற்கள் ஏற்படுவது சகஜம். குறைவான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளாததன் விளைவாக சிறுநீர் அதிகளவு செறிவூட்டப்படுகிறது. இதனால் தாதுக்கள் ஒன்றிணைந்து கற்களாக மாறுகின்றன. சியோவுக்கு தண்ணீர் குடிக்கப் பிடிக்காததால் அதற்கு பதிலாக Bubble Tea-ஐ மட்டும் குடித்திருக்கிறார். (தைவானில் இந்த டீ பிரபலம்). தைவானில் 9.6 சதவிகித மக்கள் தங்கள் வாழ்நாளில் சிறுநீரக கற்கள் உண்டாகும் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். பெண்களை விட ஆண்களுக்கு சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பு…

74.1% இந்தியர்களுக்கு நல்ல உணவு இல்லை, ஏன்? ஆய்வு சொல்லும் காரணம்!! | Study Says 74.1% Indians Can’t Get Healthy Food

விரும்பிய உணவை அனைவராலும் வாங்கிவிட முடிவதில்லை. இன்னும் பல இடங்களில் மூன்று வேளை உணவு என்பது பலருக்கும் கிடைக்காமல் இருக்கிறது. ஆரோக்கியமான உணவை பெறப் பணம் முக்கிய தேவையாக உள்ளது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, `கடந்த 2021-ம் ஆண்டில் 74.1 சதவிகித இந்தியர்களால் ஆரோக்கியமான உணவைப் பெற முடியவில்லை’ என்று கூறியுள்ளது. இது குறித்து உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்… “ஆரோக்கியமான உணவைப் பெற முடிந்தவர்களின் எண்ணிக்கை 2020-ல் 76.2 சதவிகிதமாக…

சாக்லேட்டை நினைத்தாலோ, பார்த்தாலோ பயம்… `ஸோகோலாட்டோஃபோபியா’ அறிகுறிகள், தீர்வுகள்!

ஒவ்வொருவருக்கும் சிலவற்றின் மீது பயம் இருக்கும். உயரம், கூட்டம், தனிமை என `தெனாலி’ படத்தில் நடிகர் கமல் சொல்வதுபோல், பல விதமான பயங்கள் பலருக்கும் இருக்கலாம். ஆனால், சாக்லேட்டை கண்டாலோ, அதை உண்டாலோ சிலருக்கு ஒருவித பயம் (phobia) ஏற்படும் என்றால் நம்ப முடிகிறதா..?fear இவ்வளவு குறைவான செலவில் அழகாக ஜொலிக்க முடியுமா…? தலை முதல் கால்வரை… பட்ஜெட் பியூட்டி டிப்ஸ்!சாக்லேட்டின் மீதான இந்த பயம் `ஸோகோலாட்டோஃபோபியா’ Xocolatophobia என்று அழைக்கப்படுகிறது. இந்த பயத்தால் பாதிக்கப்பட்டவர்கள், சாக்லேட்டை…

மனைவியின் வயது 18-க்கு மேல் இருந்தால் Marital rape குற்றமா..? – விகடன் கருத்துக் கணிப்பு முடிவு! | Is marital rape a crime if the wife is over 18? – Vikatan poll results

அதில், “மனைவியின் வயது 18 அல்லது அதற்கு மேல் இருந்தால், மனைவியின் விருப்பத்துக்கு எதிரான கட்டாய பாலுறவு குற்றமல்ல என்ற அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு…* சரியானது * ஏற்புடையது அல்ல * கருத்து இல்லை’’எனக் கேட்டிருந்தோம். மொத்தம் 3,565 பேர் கருத்துக் கணிப்பில் பங்கேற்றுள்ளனர். கருத்துக் கணிப்பின் முடிவில், `சரியானது’ என 17 சதவிகிதத்தினரும், `ஏற்புடையது அல்ல’ என 78 சதவிகிதத்தினரும், `கருத்து இல்லை’ என 6 சதவிகிதத்தினரும் பதிலளித்து இருந்தனர். விகடன் கருத்துக் கணிப்பு முடிவு!|பெரும்பாலான மக்களின் கருத்து, மனைவியின்…

Happy Teeth: சாதாரண டூத் பிரஷ் – Electric டூத் பிரஷ்… எது சிறந்தது? | Is an electric toothbrush better than a normal toothbrush?

பிரஷ் செய்யும்போது நம்மை அறியாமல் ஈறுபகுதியில் குத்தி காயம் (Ulcer) ஏற்படலாம். சிலருக்கு ஓரிரு நாள்களிலேயே அது தானாகவே சரியாகிவிடும். அதற்குப் பிறகும் சரியாகவில்லை என்றால் மருத்துவரை அணுகி அவர்கள் பரிந்துரைக்கும் ஜெல்லை பயன்படுத்தினால் சரியாகிவிடும். வலியை மட்டுப்படுத்துவதற்கு காரம், உப்பு குறைவாக இருக்கும் உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தச் சமயத்தில் இளநீர் அதிகமாகக் குடிக்கலாம். அதில் இருக்கும் எலக்ட்ரோலைட்ஸ் அதன் எரிச்சலை மட்டுப்படுத்தும்” என்றார் அவர்.பற்கள் பாதுகாப்பு, சிகிச்சை, வாய் சுகாதாரம் தொடர்பான சந்தேகங்களுக்கு விடைகளையும்…

உணவு முதல் பயிற்சி வரை… ஈரோட்டில் இயற்கை உணவு திருவிழா! | From food to workshop… Erode Natural Food Festival!

நாளை (டிசம்பர் 17-ம் தேதி) ஈரோட்டில் இயற்கை உணவு திருவிழா நடைபெறவிருக்கிறது. இந்த விழாவைத் தமிழ்நாடு இயற்கை வேளாண் கூட்டமைப்பு, VET கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்ந்து நடத்த உள்ளனர். இந்த உணவு திருவிழாவானது VET கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த உணவு திருவிழாவிற்கு “மண் மனம்’ என்று பெயரிட்டிருக்கின்றனர்.பாரம்பர்ய அரிசி வகைகள்மண் மனம் இயற்கை உணவு திருவிழாவில் விழாவில் பல்வேறு உணவுகள், பயிற்சிப் பட்டறைகள், பொருட்கள் ஆடைகள், கலை நிகழ்ச்சிகள், சிறுவர்களுக்கான விளையாட்டுகள்…

1 18 19 20 21 22 211