Browsing: ஆரோக்கியம் | Health

சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் திரிபலா சூரணம்:எல்லோரும் எடுக்கலாமா? | Triphala Chooranam recommended in Siddha medicine: Can everyone take it?

உடல் சூட்டைக் குறைக்கவும், மலச்சிக்கலைப் போக்கவும், குடலைச் சுத்தம் செய்வதற்கும், குடல்நலத்தை மேம்படுத்துவதற்கும், ரத்தத்தைச் சுத்திகரிப்பதற்கும், உடலிலுள்ள கழிவுகளை நீக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் திரிபலா சிறந்த மருந்தாக சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படுகிறது.  நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் திரிபலா சிறந்த  மருந்தாகப் பயன்படும். இந்நோய்கள் உள்ளவர்களுக்கு இயல்பாகவே ஒரு சோர்வு இருக்கும். அந்தச் சோர்வைப் போக்குவதற்கும் திரிபலா நல்லது. முதுமையால் பார்வைத் திறன் குறைவதையும் திரிபலா தடுக்கும். உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதைத்…

Doctor Vikatan: 50 ப்ளஸ் வயதில் பால் அலர்ஜி… தற்காலிகமானதா? நிரந்தரமாகத் தொடருமா?

Doctor Vikatan: என் வயது 50. இத்தனை வருடங்களாக நான் பால் மற்றும் பால் உணவுகள் சாப்பிட்டு வந்திருக்கிறேன். திடீரென ஏற்பட்ட வயிற்றுக் கோளாறுக்காக மருத்துவரை அணுகியபோது, பால் அலர்ஜி என்று சொல்லி, பால், பால் பொருள்கள் அனைத்தையும் தவிர்க்கச் சொல்கிறார். பால் அலர்ஜி என்றால் பனீர், தயிர், மோர் என எதுவும் சாப்பிடக்கூடாதா…. சைவ உணவுப் பழக்கமுள்ள எனக்கு வேறு எப்படி கால்சியம் கிடைக்கும்? பால் அலர்ஜி என்பது இப்படி திடீரென வருமா… நிரந்தரமாகத் தங்கிவிடுமா……

ஒரு வாரமாக மலம் கழிக்காத 4 வயதுக் குழந்தை… சிகிச்சை தேவையா? | A 4-year-old child who hasn’t passed stool for a week… Is medical treatment necessary?

உணவில் மாற்றம் செய்வது மிக முக்கியம். தினமும் கீரை, காய்கறி, பப்பாளி, பழுத்த வாழை, பேரீச்சை போன்ற பழங்கள், ராகி, ஓட்ஸ் போன்ற முழுதானியங்களையும் சேர்க்க வேண்டும். இவை மலம் மென்மையாகவும் எளிதாகவும் வெளியேற உதவும்.தண்ணீர் போதுமான அளவில் குடிக்க வேண்டும். நாள் முழுவதும் சிறு அளவுகளில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் உருவாக்கப்பட வேண்டும். இது மலம் கெட்டியாகாமல் தடுக்கும்.தினமும் கீரை, காய்கறி, பப்பாளி, பழுத்த வாழை, பேரீச்சை போன்ற பழங்கள், ராகி, ஓட்ஸ் போன்ற முழுதானியங்களையும்…

மருத்துவ உலகின் புதிய அச்சுறுத்தல்…. ‘IDIOT Syndrome’ என்ன, எப்படி மீள்வது? | Medical World’s Newest Threat… ‘IDIOT Syndrome’: What you need to know and how to overcome it?

தேவையற்ற டெஸ்ட்டுகள் வேண்டாமே…!இன்றைய வணிகமயமான மருத்துவச் சூழலில், கார்ப்பரேட் ஆய்வகங்களின் முடிவுகள் சில நேரங்களில் நோயாளிகளைத் தேவையற்ற பதற்றத்திற்கு உள்ளாக்குகின்றன. கார்ப்பரேட் ஆய்வகப் பரிசோதனைகளின் டெஸ்ட் ரிப்போர்ட்டில் மிகச்சிறிய மாற்றம் இருந்தால்கூட அதைச் சிவப்புக் குறியீட்டில் குறிப்பிட்டு, மக்களை பீதி அடையச் செய்வது நடக்கிறது. மருத்துவர் சொல்லாமலேயே, கூகுளில் தேடி, தாங்களாகவே தேவையற்ற டெஸ்ட்டுகளைச் செய்து பார்ப்பவர்களும் இருக்கிறார்கள்.   35 வயது  நபர் ஒருவர், தனக்கிருந்த அறிகுறிகளை கூகுளில் செக் செய்து, அது சொன்னபடி PSA (Prostate…

தாமதமாகும் மருத்துவர் appointment… மருந்துகளை நிறுத்தலாமா, தொடர வேண்டுமா? | Delayed doctor appointment… Should I stop the medications or continue them?

சில மருந்துகள் இத்தனை நாள்கள்தான் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கும். உதாரணத்துக்கு, ஆன்டிபயாடிக்குகளை (Antibiotics) சொல்லலாம். அவற்றை 3 நாள்கள், 7 நாள்கள் அல்லது 10 நாள்கள் என எடுக்கச் சொல்லியிருப்பார்கள். அப்படிப்பட்ட மருந்துகளைக் குறிப்பிட்ட நாள்களுக்குப் பிறகு நிறுத்திவிடலாம். ஆனால், சர்க்கரைநோய் (Diabetes), ரத்த அழுத்தம் (Blood Pressure), கொலஸ்ட்ரால் போன்ற பிரச்னைகளுக்கான மருந்துகளை, மருந்துச்சீட்டில் 30 நாள்கள் என்று போட்டிருந்தாலும் அத்துடன் நிறுத்தக்கூடாது. மருத்துவரைச் சந்திக்க அடுத்த அப்பாயின்ட்மென்ட் கிடைக்க இரண்டு, மூன்று நாள்கள் தாமதமாகலாம்.…

காலை உணவுக்குப் பிறகு சாப்பிட வேண்டிய மாத்திரையை மறந்தால், மதியம் எடுக்கலாமா? | If I forget to take a medicine that should be taken after breakfast, can I take it in the afternoon?

ஒவ்வொரு மருந்தும் அதன் தன்மைக்கேற்ப குறிப்பிட்ட நேரத்தில் உட்கொள்ளப்பட வேண்டும்.  உதாரணத்துக்கு, சத்து மாத்திரைகள்…  இவை உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்குவதால், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம், தவறில்லை. அதுவே, வலி நிவாரணிகள் (Painkillers) வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால், அவற்றை  எப்போதும் சாப்பிட்ட பிறகு மட்டுமே உட்கொள்ள வேண்டும். அசிடிட்டி மாத்திரைகள்,  அமிலத்தன்மையைக் குறைப்பதற்காகப் பரிந்துரைக்கப்படுபவை.  இந்த மாத்திரைகளைச் சாப்பிடுவதற்கு முன்னரே எடுத்துக்கொள்வது தான் பலன் தரும்.எனவே,  ஒரு நோயாளிக்கு எந்தக் காரணத்திற்காக, எந்த அளவில் மருந்து வழங்கப்பட்டது என்பது அந்த நோயாளிக்கு…

சர்க்கரை நோய் சிகிச்சை: ‘MVCON 2026’ மாநாட்டில் டாக்டர் ஏ.வி.அனூப்பிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! | MV CON 2026 lifetime acjivement award for DR Anoob

சென்னையில் சர்க்கரை நோய் மற்றும் பாத பராமரிப்பு குறித்த உலகத்தரம் வாய்ந்த விவாதங்களுடன் “எம்.வி.கான் 2026′ (MVCON 2026) அறிவியல் மாநாடு மூன்று நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவில், ஆயுர்வேதம் மற்றும் நவீன மருத்துவத்தை ஒருங்கிணைத்து ஆரோக்கிய சேவையில் முத்திரை பதித்து வரும் ஏ.வி.ஏ (AVA) குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஏ.வி. அனூப் அவர்களுக்கு, மதிப்புமிக்க ‘எம்.வி.கான் வாழ்நாள் சாதனையாளர் விருது 2026’ வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்…

Doctor Vikatan: உயரம் குறைவான குழந்தை… உணவுகளின் மூலம் தீர்வு கிடைக்குமா?

Doctor Vikatan: என் 8 வயதுப் பெண் குழந்தை, அந்த வயதுக்குண்டான உயரத்தில் இல்லை. இது இப்படியே தொடருமோ என பயமாக இருக்கிறது. குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க பிரத்யேக உணவுகள் ஏதேனும் இருந்தால் பரிந்துரைக்க முடியுமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்ஒரே ஓர் உணவுப்பொருளை மட்டும் சாப்பிடுவதால் குழந்தைகளின் உயரத்தை அதிகரித்துவிட முடியாது. குழந்தைகளின் சரியான வளர்ச்சிக்கு (Optimal Growth) நல்ல ஊட்டச்சத்து மிக அவசியமானது. உயரம்…

தோட்டத்தில் தானாக முளைத்த கல்யாண முருங்கை… மருத்துவ குணம் மிக்கதா? | The Kalyanama Murungai (Indian Coral Tree) that grew naturally in my garden… does it have medicinal properties?

ஃப்ரெஷ்ஷான கல்யாண முருங்கை இலைகள் கிடைக்கும் என்பவர்கள், 5 முதல் 10 இலைகளை அரைத்து சாறு எடுத்து, அதில் 20 மில்லி (சுமார் கால் டம்ளர்) அளவு காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தாலும், கர்ப்பப்பை மற்றும் சினைப்பை தொடர்பான பிரச்னைகள் குணமாகும். குறிப்பாக, எடைக்குறைப்புக்கு மிகச் சிறப்பாக உதவும்.கல்யாண முருங்கைக்கீரை மதுரையில்  மிகவும் பிரபலம். அங்குள்ள சௌராஷ்டிர இன மக்கள் இந்த இலையை அரிசிமாவுடன் கலந்து  ‘கல்யாண முருங்கை வடை’ அல்லது ‘முள் முருங்கை வடை’ …

Soap அல்லது Syndet bar… சருமத்துக்கு எது சிறந்தது, ஏன்? | Soap or Syndet bar… which is better for the skin and why?

சோப் என்பது பெரும்பாலும் அல்கலைன் (Alkaline) தன்மையில் தயாரிக்கப்படும்  டிடர்ஜென்ட் சார்ந்த பொருள். இதன் பி.ஹெச் (pH) அளவு பொதுவாக 8 முதல் 9 வரை இருக்கும். சில சோப்புகளில் 9-க்கு அதிகமாகவும் இருக்கும். சோப்பில் வாசனைக்காகவும் பிற தேவைகளுக்காகவும் செயற்கை நறுமணங்கள், அதிக ஸ்ட்ராங்கான சந்தன எண்ணெய் மற்றும் கெமிக்கல்கள்   சேர்க்கப்படுகின்றன.இவையெல்லாம் சேர்க்கப்பட்ட சோப்பை பயன்படுத்தும்போது சருமத்தில் உள்ள “ஆசிட் மேன்ட்டில்’ (Acid mantle) எனும் மெல்லிய கொழுப்புப் படலம் நீக்கப்படுகிறது. இதில் சீபம், நுண்ணுயிர்…

1 2 3 212