Browsing: ஆரோக்கியம் | Health

Doctor Vikatan: முடியே இல்லாமல் பிறந்த குழந்தை… வளர்ந்ததும் இப்படியேதான் இருக்குமா? | If a baby is born without hair, will it remain that way when they get older?

குழந்தையின் முடி வளர்ச்சி என்பது கருவிலிருக்கும் போதான நிலை, பிரசவத்துக்குப் பிறகான நிலை என இரண்டு கட்டங்களைக் கொண்டது. பிரசவத்துக்குப் பிறகான குழந்தையின் முடி வளர்ச்சியானது 18 மாதங்களில்கூட ஆரம்பிக்கலாம். இரண்டாம்கட்ட வளர்ச்சியானது ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடலாம். ஒரு சில குழந்தைகளுக்கு முதல் கட்ட வளர்ச்சி முடிவதற்கு முன்பே, இரண்டாம் கட்ட வளர்ச்சி ஆரம்பிக்கும். அது வெளிப்படையாகத் தெரிவதில்லை. இன்னும் சில குழந்தைகளுக்கு முதல்கட்ட முடி வளர்ச்சியானது முற்றிலும் உதிர்ந்து, அதையடுத்து நீண்ட நாள்களுக்குப் பிறகே இரண்டாம் கட்ட…

Doctor Vikatan: வைட்டமின் மாத்திரைகளை இப்படி எடுத்தால்தான் பலன் கிடைக்குமா..? | How to take vitamin tablets for maximum benefit?

உதாரணத்துக்கு, நீங்கள் பேரீச்சம்பழம், வெல்லம் போன்றவற்றைச் சாப்பிடும்போது, கூடவே ஆரஞ்சு ஜூஸ்,  எலுமிச்சைப்பழ ஜூஸ் போன்றவற்றைக் குடிக்கும்போது இரும்புச்சத்து நன்றாக உட்கிரகிக்கப்படும். கீரை சாப்பிடுகிறீர்கள் என்றால், அத்துடன் வைட்டமின் சி சத்துள்ள உணவைத் திட்டமிட்டுக் கொள்ளலாம். எலுமிச்சைப்பழ சாதம், கீரை மாதிரியான காம்போவில் எடுத்துக்கொள்ளலாம்.வைட்டமின் டியும் கால்சியமும் சேர்த்து எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவை.  இந்த இரண்டும் இரட்டைப் பிறவிகள் போல… வைட்டமின் டி சத்தானது முட்டை, செறிவூட்டப்பட்ட உணவுகளில் (fortified foods)  அதிகம் கிடைக்கும். ஆனால், ஒவ்வொரு வைட்டமின் சப்ளிமென்ட்டையும் எதனுடன் சேர்த்து எடுக்க வேண்டும் என்று…

Doctor Vikatan: பிறந்த குழந்தையின் தொப்புள் வீக்கம்… தானாகச் சரியாகுமா, சிகிச்சை தேவையா? | Newborn baby’s umbilical swelling… Will it go away on its own, or does it need treatment?

குழந்தையின் வயிற்றுப்பகுதியில் உள்ள தசையின் தளர்ச்சி காரணமாகவோ, அல்லது துளைபோன்று தசைப்பகுதி சற்று வளர்ச்சி அடையாமல் இருப்பதாலோ வயிற்றின் உள்பகுதியில் உள்ள திசு மற்றும் குடல் போன்ற உறுப்புகள், தொப்புளைச் சுற்றி வீங்கியது போல பிதுங்கி வெளிப்படுவதே ‘அம்பிலிகல் ஹெர்னியா’ எனப்படுகிறது. இந்தப் பிரச்னை, பொதுவாக குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளிடம் காணப்படுகிறது. அதாவது 30 முதல் 40 சதவிகிதம் என்ற அளவில்…. ஆனால், நிறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளிலும் 10 சதவிகிதத்துக்கும் குறைவான சிலரிடமும் இந்தப் பிரச்னை காணப்படுகிறது.சிறிய அளவிலான தொப்புள் வீக்கமானது,…

Doctor Vikatan: டைல்ஸ் தரையில் நடப்பதால் மூட்டுவலி, பாதவலி வருமா?

Doctor Vikatan: இன்று அனேக வீடுகளில் தரைக்கு டைல்ஸ்தான் போடுகிறார்கள். ஆனால், டைல்ஸ் போட்ட தரை பலருக்கும் ஏற்றுக்கொள்வதில்லை. பாதவெடிப்பில் தொடங்கி, மூட்டுவலி, பாதவலி என பல பிரச்னைகள் வருகின்றன. உண்மையிலேயே டைல்ஸ் தரைக்கும், இதுபோன்ற வலிகளுக்கும் தொடர்பு உண்டா… டைல்ஸ் தரை போடப்பட்ட வீடுகளில் வசிப்போருக்கு உங்கள் அட்வைஸ் என்ன?பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்மனிதர்கள் அவசியம் மேற்கொள்ள வேண்டிய உடலியக்கங்களில் முக்கியமானது நடை. இந்த இயக்கத்துக்கேற்ப…

5 ஆண்டுகளாக குளிக்காமல் இருக்கும் மருத்துவர் – சுகாதாரம் குறித்து என்ன சொல்கிறார் தெரியுமா?

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு மருத்துவர் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக குளிக்காமல் இருப்பதாக கூறியிருக்கிறார். ஐந்து வருடங்களாக குளிக்காமல் இருக்கும்போதும் கூட தன்மீது எந்தவிதமான துர்நாற்றமும் வீசவில்லை எனவும் அவர் கூறியிருக்கிறார். எதற்காக இவ்வாறு குளிக்காமல் இருக்கிறார் என்பதற்கும் சில காரணங்கள் கூறுகிறார். அது என்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். குளித்தல், பல் துலக்குதல், துணிகளை துவைத்து அணிதல், நகம் வெட்டுதல் போன்ற சுகாதார பழக்க வழக்கங்கள் நம் அன்றாட வாழ்வில் இருப்பது அவசியம் என்று…

Apollo: அறிவிக்கப்பட வேண்டிய நோயாக புற்றுநோயை வகைப்படுத்த அரசுக்கு வலியுறுத்தல்!|Apollo Cancer Center – ‘Unify to Notify’– Urges Government to Classify Cancer a Notifiable Disease in India

இந்தியாவில் புற்றுநோய்க்கான சிகிச்சைப் பராமரிப்பில் நிலைமாற்றத்தை கொண்டு வருவதற்கு ‘யுனிஃபை டு நோட்டிஃபை’ என்ற இப்பரப்புரை திட்டம், ஒரு அத்தியாவசிய நடவடிக்கையாகும்.  ஒவ்வொரு புற்றுநோய் நேர்வும், ஒவ்வொரு நோயாளியும் முக்கியமான தரவாக கருதப்படுவதற்கு இந்த அறிவிக்கை உதவும்.  இந்தியாவில் புற்றுநோய்க்கு சிறப்பான சிகிச்சை என்ற இலக்கை நோக்கியப் பயணத்தில் எந்த தரவும் தவறவிடப்படாமல் இருப்பதை இந்த அறிவிக்கை உறுதிசெய்யும்.  ஹரியானா, கர்நாடகா, திரிபுரா, மேற்கு வங்காளம், பஞ்சாப், மிசோரம், ஆந்திரா, கேரளா, குஜராத், தமிழ்நாடு, அருணாச்சல பிரதேசம், சிக்கிம்,…

Doctor Vikatan: கால்சியம் மாத்திரை எடுத்தால் கிட்னி ஸ்டோன் வருமா? | Will taking calcium tablets cause kidney stones?

மருந்துக் கடைகளில் நீங்களாக கால்சியம் மாத்திரைகள், சத்து மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடுவதுதான் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.  அவற்றின் அளவோ, எடுக்க வேண்டிய கால அளவோ, பக்க விளைவுகளோ உங்களுக்குத் தெரியாமல் எடுக்கும்போதுதான் பிரச்னையே.போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, அளவுக்கு மீறி உடலுழைப்பைச் செலுத்துவது,  துரித உணவுகளைச் சாப்பிடுவது, பதப்படுத்தப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவது, கிரில்டு சிக்கன், மட்டன் உணவுகள், அளவுக்கதிக பால், அளவுக்கதிக கீரை, சாக்லேட், சோயா பால்,  சோடியம் அதிகமுள்ள உணவுகள் போன்றவற்றைச் சாப்பிடுவதால்தான் சிறுநீரகக் கற்கள் உருவாகும்.பார்பெக்யூ உணவுகளைச் சாப்பிடும் கலாசாரம்…

Doctor Vikatan: தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் diabetes வருமா?

Doctor Vikatan: எனக்கு வயது 40. பல வருடங்களாக மலச்சிக்கல் பிரச்னை உள்ளது. அதற்காக மூன்று மாதங்கள் தினமும் காலையில் வாழைப்பழம் சாப்பிட்டேன். அதன் பிறகு சுகர் டெஸ்ட் செய்தபோது எனக்கு ப்ரீ டயாபட்டீஸ் என்று வந்தது. எனக்கு அத்தனை வருடங்களாக இப்படி வந்ததே இல்லை. 3 மாதங்கள் சாப்பிட்ட வாழைப்பழம்தான் காரணமோ என அதை நிறுத்திவிட்டு மறுபடி சுகர் டெஸ்ட் செய்து பார்த்தபோது ப்ரீ டயாபட்டீஸ் இல்லை என்று வந்தது. வாழைப்பழம் சாப்பிட்டால், சுகர் இல்லாதவர்களுக்கும் சுகர்…

Doctor Vikatan: நீரிழிவு நோயாளிகள் பனங்கிழங்கு சாப்பிடலாமா? | Can diabetic patients eat palmyra sprout?

பனங்கிழங்கில் நார்ச்சத்து தவிர, வேறு நிறைய சத்துகளும் உள்ளன. நார்ச்சத்தின் அளவு சற்று அதிகம். இப்போதைக்கு உலகத்தின் தேவையே நார்ச்சத்து மிகுந்த உணவுகள்தான். அந்த அளவுக்கு பெரும்பாலான மக்களும் மலச்சிக்கல் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பனங்கிழங்குக்கு மலச்சிக்கலைப் போக்கும் தன்மை உண்டு. உடலில் சேர்ந்த கழிவுகளை முறையாக வெளியேற்றும் தன்மையும் இதற்கு உண்டு. நார்ச்சத்து என பொதுவாகச் சொல்கிறோம். அந்த நார்ச்சத்து உடலின் கழிவுகளை வெளியேற்றும் மிகப் பெரிய செயலைச் செய்வதே மிக நல்ல விஷயம். அந்தத் தன்மை பனங்கிழங்குக்கு உண்டு.பனங்கிழங்குபனங்கிழங்கு சாப்பிடுவதால் ஆண்களுக்கு…

Doctor Vikatan: தனக்குத்தானே பேசிக்கொள்ளும் மாமனார்: முதுமைதான் காரணமா… சிகிச்சை அவசியமா?

Doctor Vikatan: என் மாமனாருக்கு 75 வயதாகிறது. மாமியாரும் அவரும் தனியே வசிக்கிறார்கள். சமீப காலமாக என் மாமனார் தனக்குத்தானே பேசிக்கொள்கிறார். வெளியே செல்லும்போதும் இதைச் செய்கிறார். மறைந்திருந்து பார்த்துவிட்டு விசாரித்தால் அப்படியெல்லாம் இல்லையே என மறுக்கிறார். சிறிது நேரத்தில் மீண்டும் அதையே செய்கிறார். இதற்கு ஏதேனும் சிகிச்சை தேவையா? இதை நிறுத்த முடியுமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ் சுபா சார்லஸ்Doctor Vikatan: `Game Changer’ ராம் சரண்: திக்குவாய் பிரச்னையிலிருந்து முழுமையாக…