இளமை, கூந்தல் வளர்ச்சி, உடல் பலம், தாம்பத்யம்… மிடுக்காய் மிளிர கடுக்காய் போதும்! | kadukkai and its medical uses
இயற்கை தந்த பல மருத்துவ குணம் கொண்ட பொருள்களில் கடுக்காய்க்கு முக்கிய இடமுண்டு. `காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் உண்டால் கோலை ஊன்றி குறுகி நடக்கும் கிழவனும், கோலை வீசி குலாவி நடப்பானே’ என்கிறது சித்தர்களின் வாக்கு. `ஈனாத மாட்டுக்கு ஒரு கடுக்காய்; இளம் பிள்ளைத்தாய்ச்சிக்கு ஏழு கடுக்காய்’ போன்ற பழமொழிகளும் கடுக்காயின் மகத்துவத்தை நமக்கு உணர்த்துகின்றன.`உடலை அழியாத் தன்மைக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்றால், 60-க்கும் மேற்பட்ட காயகல்ப முறைகளைப் பின்பற்ற வேண்டும்.…





