'ஆடினே இருப்பேன்!' – காவ்யா மாறனின் ராஜ தந்திரங்களை உடைத்தெறிந்த ஆர்.சி.பி! – எப்படி வென்றது?
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், ‘எம்.எல்.ஏக்களுக்கு இலவச டிக்கெட்’ கொடுக்கவில்லை என்பதை சில எம்.எல்.ஏக்கள் அரசியலாக மாற்றி அறச்சீற்றம் கொண்டிருந்தனர். கர்நாடகா கிரிக்கெட் போர்ட் அப்படி மூக்கு சிந்தி அழுது உருண்டு டிக்கெட் வாங்கி அமர்ந்திருக்கும் எம்.எல்.ஏக்களின் சீட் நம்பர்களை ஒரு பிரிண்ட் அவுட் போட்டு ஆர்.சி.பியின் கையில் கொடுத்துவிட்டார்கள் போல!RCB vs SRHஆர்.சி.பி பேட்டர்கள் குறிவைத்து அடித்ததில் அப்படி அத்தனை பந்துகளும் கேலரியில்தான் போய் விழுந்தது. எத்தனை பேரின் மண்டை உடைந்ததோ! சன்ரைசர்ஸ் வேடிக்கை மட்டுமே பார்க்க…








