சென்னையில் வரும் 28ம் தேதி சிறப்பு பொதுக்குழு பாமக தலைவராக அன்புமணி தேர்வாகிறார்? ஜி.கே.மணிக்கு வேறு பதவி வழங்க திட்டம்
சென்னை: சென்னையில் வருகிற 28ம் தேதி பாமக சிறப்பு பொதுக்குழு கூடுகிறது. இதில் பாமக தலைவராக அன்புமணி நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் ஜி.கே.மணிக்கு வேறு பதவி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் வருகிற 28ம் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் சென்னை அடுத்த திருவேற்காட்டில் நடக்கிறது. கூட்டத்திற்கு பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமை வகிக்கிறார். பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி முன்னிலை வகிக்கின்றனர். பொதுச்செயலாளர் வடிவேல்…








