தலைமை கழகத்தை கைப்பேற்றுவேன் என சசிகலா பேச்சு எதிரொலி; அதிமுக அலுவலகத்தில் பாதுகாப்புக்காக ஏராளமானோர் குவிப்பு: குத்தாட்டம் போடும் வீடியோவால் பரபரப்பு
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பேற்றுவேன் என்று சசிகலா கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு குத்தாட்டம் போடும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை எழுந்ததை அடுத்து இபிஎஸ், ஓபிஎஸ் இடையே மோதல் உருவானது. இதைத் தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் அதிரடியாக குற்றம் சாட்டி வருகின்றனர். அதே நேரத்தில் பொதுக்குழுவை கூட்டி பொது செயலாளராக எடப்பாடி திட்டமிட்டுள்ளார். இதற்காக வருகிற 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடும் என்று…








